districts

திருச்சி முக்கிய செய்திகள்

அங்கன்வாடி ஊழியர்கள் சங்க பேரவை

அரியலூர்,  ஜூலை 30 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்க ஒன்றிய பேரவை நடைபெற்றது. சங்க  நிர்வாகி ராஜாமணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சகுந்தலா துவக்கவுரை யாற்றினார்.  பேரவையில் சங்கத் தின் தலைவராக மலர் கொடி, செயலாளராக விஜயா, பொருளாளராக சுமதி, துணைத் தலைவர் களாக அறிவு, கலைச் செல்வி, துணைச் செய லாளர்களாக உஷாராணி, ஆஷா ஆகியோர் தேர்வு  செய்யப்பட்டனர். அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் அம்பிகா, சிஐடியு மாவட் டச் செயலாளர் துரை சாமி ஆகியோர் சிறப்புரை யாற்றினர். 

மக்களுடன் முதல்வர் முகாம்

பாபநாசம், ஜூலை 30-  சாலியமங்கலம், எட வாக்குடி, ஜெண்பகபுரம், அருமலைக்கோட்டை, பூண்டி, பள்ளியூர், திருபு வனம் ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது.  தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலத்தில் நடந்த  முகாமில், பொது மக்களி டமிருந்து பல்வேறு கோரிக் கைகள் தொடர்பான மனுக்கள் வரப்பெற்றன. முன்னதாக தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவர் முத்துச்  செல்வம், மாவட்ட ஆட்சி யரின் நேர்முக உதவியா ளர் சத்துணவு தியாக ராஜன், அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியத் தலை வர் கலைச்செல்வன், அம்மாப்பேட்டை பிடிஓ-க்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் மருத்துவ முகாம் நடந்தது. மகளிர் சுயஉதவிக் குழு விற்கு தொழிற்கடன் உதவி வழங்கப்பட்டது. 

எழுத்தறிவு திட்ட பயிற்சி

அறந்தாங்கி, ஜூலை 30- புதுக்கோட்டை மாவட் டம் மணமேல்குடி வட்டார  வளமைய மேற் பார்வையாளர் (பொ)  சிவ யோகம் தலைமையில் புதிய பாரத திட்டத் தன்னார் வலர்களுக்கான பயிற்சி தொடங்கியது. மணமேல்குடி ஒன்றி யத்திற்கு உட்பட்ட 51 மை யங்கள், புதிய பாரத திட்டத்தில் தேர்வு செய்யப் பட்டு, இதுவரை 1029 கற் போர்கள் விவரம் சேக ரிக்கப்பட்டு பதிவு செய்யப் பட்டுள்ளது. இப்பயிற்சியில் கலந்து  கொண்ட தன்னார்வ லர்களுக்கு, கற்போ ருக்கு வாசிக்க எழுத கற்றுக் கொடுக்க வேண்டும். தன்னுடைய கையெ ழுத்தை போடுவதற்கும், தன்னுடைய ஊர் பெயர், குடும்பத்தில் உள்ள உறுப் பினர்கள் பெயர்கள், சிறு  சிறு வார்த்தைகளை எழுத  வைத்தல் போன்ற வற்றுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும் என அறிவுறுத் தப்பட்டது. ஆசிரியர் பயிற்றுநர்கள் சசிகுமார், பன்னீர்செல்வம் ஆகி யோர் பயிற்சி அளித்தனர்.

பாராட்டு விழா

பாபநாசம், ஜூலை 30- விவேகானந்தா ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் வெற்றியாளர்களுக்கு பாராட்டு விழா, ஒரு நாள்  இலவச பயிற்சி நடந்தது.  தஞ்சாவூர் மாவட்டம் பாப நாசத்தில் நடந்த விழா விற்கு தேவராஜன் தலைமை வகித்தார். பயிற்று நர் லெட்சுமி பிரியா, சதீஸ் குமார் ஆகியோர் பயிற்சி யளித்தனர்.

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் முக்கொம்பு மேலணைக்கு வந்தது

திருச்சிராப்பள்ளி, ஜூலை 30 - டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் திங்களன்று முக்கொம்பு மே லணையை வந்தடைந்தது.  கேரளா மற்றும் கர்நா டக மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை தீவிர மடைந்துள்ள நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி களில் கனமழை பெய்து வரு வதால், கர்நாடக மாநிலத் தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணை கள் நிரம்பின. அதைத் தொ டர்ந்து மேற்கண்ட 2 அணை களில் இருந்தும் உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்தது. இதை யடுத்து காவிரி டெல்டா பா சனம் மற்றும் ஆடிப்பெருக்கு விழாவுக்காக ஞாயிறன்று மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப் பட்டது. செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி மேட்டூர்  அணையில் இருந்து வினா டிக்கு 23 ஆயிரம் கனஅடி நீர்  திறந்து விடப்பட்டது. இந்த  தண்ணீர் பல்வேறு மாவட் டங்களைக் கடந்து திங்க ளன்று மாலை, கரூர்  மாவட்டம் தவுட்டுப்பாளை யம் பகுதிக்கு வந்த டைந்தது. பின்னர் அங்கி ருந்து செவ்வாயன்று அதி காலை மாயனூர் தடுப்ப ணைக்கு வந்து சேர்ந்தது. இந்த தண்ணீர் காலை  9 மணியளவில் தொட்டி யத்தை தாண்டியது. தொ டர்ந்து, காவிரி நீர் முக் கொம்பு மேலணையை வந்த டைந்தது. தற்போதைய நிலையில், மாயனூர் கத வணையில் 6000 கனஅடி தண்ணீர் மட்டுமே நமக்கு வந்து கொண்டிருக்கிறது. இதன் அளவு படிப்படி யாக உயரும். புதனன்று முக்கொம்பு மேலணைக்கு 20 ஆயிரம் கனஅடி நீர்  வரும் என எதிர்பார்க்கிறோம். காவிரியில் அதிகபட்ச மாக 30 ஆயிரம் கன அடி  தண்ணீர் திறந்துவிட வேண் டும். அதற்கு மேலாக உபரி நீர் வந்தால் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும். ஏற்கனவே காவிரி மற்றும் கொள்ளிடம் கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சி யர் வெள்ள அபாய எச்ச ரிக்கை விடுத்துள்ளார்.