districts

img

அகில இந்திய கூடைப்பந்தாட்ட போட்டி பெரியகுளத்தில் தொடங்கியது

தேனி, மே 17- பெரியகுளத்தில் அகில இந்திய அளவிலான கூடைப்  பந்தாட்ட போட்டி புதன்கிழ மையன்று தொடங்கியது பெரியகுளத்தில் ஆண்டு  தோறும் அகில இந்திய அள விலான கூடைப்பந்தாட்டப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான போட்டி மாலை தொடங்கி யது.முதல்போட்டிக்கு சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் துணைத்தலைவர் அபு தாஹிர் தலைமை வகித் தார். விளையாட்டு கழக கொடியை பெரியகுளம் நகர்  மன்ற தலைவர் சுமிதா சிவ குமார் ஏற்றி வைத்தார்.ராஜ் ஸ்ரீ சர்க்கரை ஆலை பொது மேலாளர் மோகன்குமார்  போட்டியை தொடங்கி வைத்  தார். முதல் போட்டியில் பெரியகுளம் சில்வர் ஜூப்ளி விளையாட்டு கழக  அணி 80:78 புள்ளிக் கணக் கில் வத்தலக்குண்டு ராயல்  கூடைப்பந்து கழக அணியை வென்றது. இரண்டாவது ஆட்டத் தில் பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப்  கிரீன்ஸ் அணி, திருநெல்வேலி பி. ஏ. கே.கே. கூடைப்பந்து கழக அணிகள் களம் இறங்  கின. ஏற்பாடுகளை சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப்  செயலர் சிதம்பர சூரியவேலு மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர். இப்போட்டியில் இந்திய கப்பற்படை, விமானப்படை, வருமானவரித்துறை, கேரளா மின்வாரியம், இந்தி யன் வங்கி உள்ளிட்ட 21  அணிகள் கலந்து கொள்கின்  றன. போட்டிகள் வரும் 21-ந் தேதி வரை நடைபெறும்.