மயிலாடுதுறை, செப்.3 - மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கோ. பாரதிமோகன் நினைவாக ரூ.1 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டக் குழு அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இதன் திறப்பு விழா செப்.13 அன்று நடை பெறுகிறது. இந்த அலுவலகத்தை கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் திறந்து வைக்கிறார். இந்நிகழ்ச்சிக்கு அனைவரையும் வர வேற்கும் விதமாக மார்க்சிஸ்ட் கட்சியின் மயி லாடுதுறை நகரக் குழு சார்பில், காமராஜர் சாலையில் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறுமின்றி, நகராட்சி அனுமதியுடன் வைக்கப்பட்டுள்ள 210 அடி நீளம் கொண்ட பிரம்மாண்டமான பேனர் பொதுமக்களை வெகுவாய் கவர்ந்துள்ளது.