districts

img

‘காபி வித் கலெக்டர்’ நிகழ்ச்சி அரசுப் பள்ளி மாணவர்களுடன் ஆட்சியர் உரையாடல்

புதுக்கோட்டை, ஆக.30- ‘காபி வித் கலெக்டர்’ என்ற நிகழ்ச்சியில், அரிமளம் ஒன்றியம் மிரட்டுநிலை அரசு உயர் நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சிரம்யா புதன் கிழமை உரையாடினார்.  இக்கலந்துரையாடலில் மாணவ, மாணவி களின் எதிர்கால இலக்குகள் குறித்தும், அவற்றிற்காக அவர்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆட்சியர் கேட்டறிந் தார்.  மேலும், தங்களது கனவினை நினை வாக்கும் வகையில் பள்ளி புத்தகங்களுடன், நூலகங்களில் உள்ள அரசு போட்டித் தேர்வு களுக்கான புத்தகங்களையும், சமுதாய மேம் பாட்டிற்கு தேவையான புத்தகங்களையும் ஆர்வமுடன் படிக்க வேண்டும். இதன்மூலம் அரசு வேலைவாய்ப்புகள் பெறுவதற்கு வழி வகை ஏற்படுவது குறித்தும் மாணவ, மாணவி களுக்கு ஆட்சியர் எடுத்துரைத்தார்.