தஞ்சாவூர், ஜூன் 11-
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரே நாளில் சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 247 வழக்கு களுக்குத் தீர்வு காணப்பட்டு ரூ.4.50 கோடிக்கு இழப்பீடு, தீர்வுத்தொகை பெறப்பட்டது.
தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவுப்படி தஞ்சாவூர் ஒருங்கி ணைந்த நீதிமன்றம் மற்றும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து கீழமை நீதி மன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்கு களை சமரசமாக பேசி தீர்வு காண தேசிய அளவிலான சிறப்பு மக்கள் நீதிமன்றம் தஞ்சா வூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திலும், மாவட் டத்தில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங் களிலும் நடந்தது.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதி யுமான ஜெசிந்தா மார்டின் தலைமை வகித்தார். தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நீதி மன்றத்தில் போக்சோ சிறப்பு மாவட்ட நீதிபதி சுந்தரராஜன், குற்றவியல் நீதித்துறை நடுவர் இளவரசி, வக்கீல் நேதாஜி ஆகியோர் கொண்ட முதலாவது அமர்வில் சிவில் வழக்குகள், குற்றவியல் வழக்குகள், குடும்ப நல வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக் கான சிறப்பு சார்பு நீதிபதி நாகராஜன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சுசிலா, வக்கீல் சாரதா ஆகியோர் கொண்ட இரண்டாவது அமர்வில் மோட்டார் வாகன விபத்து வழக்கு களுக்கு தீர்வு காணப்பட்டது. இந்த இரண்டு அமர்வுகள் மற்றும் கும்பகோணம், பட்டுக் கோட்டை, ஒரத்தநாடு, பாபநாசம், திருவை யாறு ஆகிய இடங்களில் உள்ள கீழமை கோர்ட்டுகளில் மொத்தம் 2,479 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு அதில் 247 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.4 கோடியே 66 லட்சத்து 10 ஆயிரத்து 485 இழப்பீடு மற்றும் தீர்வு தொகையாக வழக் காடிகளுக்கு பெற்று தரப்பட்டது.இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாள ரும், சார்பு நீதிபதியுமான இந்திராகாந்தி, மாவட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவர் அமர்சிங், செயலாளர் சசிகுமார் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்றப் பணியாளர்கள், வழக்காடிகள், பொதுமக்கள் உள்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் நிர்வாக அலுவ லர் சந்தோஷ்குமார் மற்றும் சட்ட தன்னார்வ லர்கள் செய்திருந்தனர்.