districts

img

நாவல்கள் அறிமுக விழா

கும்பகோணம், ஏப்.17- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் பயின்ற கணி தத்துறை மேனாள் மாணவர்கள் ராக வன்ஆனந்த் ‘கனல்காரிகை’ என்ற வர லாற்று நாவலையும், இளவரசி ‘கயல்வேந்  தன்’ என்ற வரலாற்று நாவலையும் படைத்தி ருந்தனர்.

 இவர்களுக்குப் பாராட்டு விழா நூல கத்துறை சார்பில் கல்லூரி முதல்வர் நா. தனராஜன் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி நூலகர் ரா.சங்கரலிங்கம் வர வேற்றார்.

 மூத்த பேராசிரியர்கள் வேதியியல் துறைத்தலைவர் மா.மீனாட்சிசுந்தரம் மற்றும் இயற்பியல் துறைத்தலைவர்  இரா. ச.சுந்தரராஜன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கணிதத்துறைத் தலைவர் லெப்டி னென்ட் அ.எட்வர்ட் சாமுவேல் நன்றி கூறி னார்.  

நாவலாசிரியர்கள் ராகவன்ஆனந்த், இளவரசி ஏற்புரை வழங்கினர். கௌவுரா பதிப்பகத்தின் வெளியீடுகளான எழுத்தா ளர் ஸ்ரீமதி எழுதிய ரூ.5,000 மதிப்புடைய 12 நூல்களை கல்லூரி மைய நூலகத் திற்கு வழங்க, கல்லூரி முதல்வர் பெற்றுக்  கொண்டார். விழாவில் கவிஞர் செ.ஆடலரசன், எழுத்தாளர் ஸ்ரீமதி, துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவி யர்கள் கலந்து கொண்டனர்.