ஒடிசாவின் பாலசோரில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட விபத்து குறித்து அதிகாரிகளுக்கு முத லில் எச்சரிக்கை விடுத்தவர் தேசிய பேரிடர் மீட்புப் படை (என்டிஆர்எஃப்) வீரர் என்.கே.வெங்கடேசன். வயது 39.
ஷாலிமார்-சென்னை கோர மண்டல் விரைவு ரயிலின் பி-7 கோச்சில் பயணித்துள்ளார். அவர் தமது உற வினர் வீட்டு திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக ஏற்கனவே விடுப்பு கேட்டு விண்ணப்பித்திருந்திருந்தார். தனக்குக் கொடுக்கப்பட்ட விடுமுறை நாட்களைப் பயன்படுத்தி சென் னைக்கு பயணித்துள்ளார்.
ரயில் விபத்து குறித்த செய்தியை முதலில் தெரிவித்தது வெங்கடேசன் தான். விபத்து நடந்ததை (வெள்ளிக் கிழமை) இரவு ஏழு மணிக்கு தனது அதிகாரிக்கு (சுபேதார் மேஜர்) தெரி வித்தோடு உடனடியாக வீரர்களை அனுப்பிவைக்குமாறும் கேட்டுள்ளார். தொடர்ந்து சக பயணிகளை மீட்டுள் ளார். இவரது தகவலே காயமடைந்த வர்களை மீட்கவும், உயிரிழந்தவர் களை மீட்கவும் உதவியுள்ளது.
மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த வெங்கடேசனின் சொந்தஊர் தஞ்சா வூர் மாவட்டத்தில் உள்ள நாயக்கர் பட்டி ஆகும். இவர் கொல்கத்தாவில் தேசிய பேரிடர் மீட்புப்படையின் இரண்டாவது பட்டாலியனில் பணி யாற்றி வருகிறார்.
வெங்கடேசன் கூறுகையில், நான் பி-7 குளிர்சாதன வசதி கொண்ட மூன்றடுக்குப் பெட்டியில் 68-ஆம் எண் இருக்கையில் அமர்ந்து பய ணித்தேன். ரயில் மாலை 6.30 மணியள வில் பாலசோரில் நின்றது. அங்கி ருந்து புறப்பட்ட 20 நிமிடங்களுக்குள் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. என்னோடு பயணித்தவர்கள் ஒரு சரக்கு ரயிலைப் பார்த்தனர், நாங்கள் குளிர்சாதனப் பெட்டியில் அமர்ந்திருந்ததால், அது செல்கிறதா அல்லது நின்றதா என்று தெரியவில்லை. அடுத்த ஒரு வினாடி யில் ஒரு பெரிய சத்தம் கேட்டது. மக்கள் தங்கள் இருக்கைகளிலிருந்து கீழே விழத் தொடங்கினர்.
விபத்து நடந்த பகுதியில் மின் விளக்கு வசதி இல்லை, நான் எனது தொலைபேசி டார்ச் வெளிச்சத்தில் அனைவரையும் பொறுமையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டேன். சில நிமிடங்களுக்குப் பிறகு, நான் ரயிலில் இருந்து இறங்கி, பலர் ரயிலி ருந்து இறங்குவதற்கு உதவினேன். முன்பதிவு செய்யப்படாத பெட்டி முதல் பி-6 வரையிலான அனைத்துப் பெட்டி களும் தடம் புரண்டன. மேலும் மக் கள் உதவி கேட்டு கதறுவதை என்னா லும் என்னோடு பயணித்தவர்களாலும் கேட்க முடிந்தது. பி-7 பெட்டியிலிருந்த ஒரு பெண்ணின் மடியிலிருந்து ஒரு குழந்தை நழுவி கீழே விழுந்தது. தொடர்ந்து உடனடியாக நான் விபத்து நடந்ததை (வெள்ளிக்கிழமை) இரவு ஏழு மணிக்கு தனது அதிகாரிக்கு (சுபேதார் மேஜர்) தெரிவித்தேன்.
விபத்து தொடர்பான புகைப் படங்களை தேசிய பேரிடர் மீட்புக்குழு வினருக்கு கைபேசி மூலம் அனுப்பி னேன். ஜிபிஆர்எஸ் உதவியுடன் சம்பவஇடத்தைத் தெளிவாகக் குறிப் பிட்டேன். இது அவர்கள் விரைந்து வருவதற்கு உதவி செய்தது.
தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே, காயமடைந்தவர்களையும் உதவிக்காக அழுபவர்களையும் மீட்க உள்ளூர் மக்கள் உதவினர். மக்கள் தண்டவாளங்களுக்கு வாளிகளில் தண்ணீரைக் கொண்டு வந்தனர். அவர்கள் மயக்க நிலையிலிருந்த பல ரின் கண்களில் தண்ணீரை தெளித்து அவர்களது மயக்கத்தைப் போக்கி விழிக்கச் செய்தனர். விபத்து நடந்த இடம் பிரதான சாலைக்கு அருகில் இருந்ததால் உள்ளூர் மக்கள் உட னடியாக சம்பவஇடத்தை வந்தடைந்த னர். அவர்களைத் தொடர்ந்து 40 கிமீ தூரம் பயணம் செய்து காவல்துறை யினர், தீயணைப்புப் படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப்படை யினர் வந்தனர் என்றார்.