districts

img

இருவருக்கு ரத்த நாளத்தில் சிக்கலான அறுவை சிகிச்சை

தஞ்சாவூர், ஆக.2-  தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனியார் மருத்துவ மனைகளுக்கு இணையாக இருவருக்கு ரத்த நாளத்தில் மிக சிக்கலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, சாதனை நிகழ்த்தப் பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆர்.பாலாஜிநாதன், ரத்த நாள அறுவை சிகிச் சைத் துறைத் தலைவர் ச.மருதுதுரை வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது: திருவாரூரில் 12 ஆண்டுகளாக வசித்து வரும் திருப்பத்தூரைச் சேர்ந்த  58 வயது கூலித்தொழிலாளி இருமல்,  சளி, தொண்டை கரகரப்பு காரணமாக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையை அணுகினார். இவருக்கு நுரை யீரல் பிரிவில் செய்யப்பட்ட சிடி ஸ்கேன் பரி சோதனையில் நெஞ்சுக்கூட்டில் பெருந் தமனி ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டு, எந்த நேரத்திலும் வெடித்து உயிருக்கு ஆபத்து நிகழலாம் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, ரத்த நாள அறுவை சிகிச்சை துறைக்கு பரிந்துரைக்கப்பட்ட இவருக்கு மார்பை பிளக்காமல் நுண்துளை  அகநாள அறுவை சிகிச்சை செய்யப் பட்டு, பெருந்தமனியில் செயற்கை ரத்தக்  குழாய் (ஸ்டென்ட் கிராப்ட்) பொருத்தப் பட்டது.  இதற்கு தனியார் மருத்துவமனையில் ரூ.7 லட்சம் செலவாகும். இங்கு தமிழக  முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கட்டணமில்லா மல் செய்யப்பட்டது. இதன் மூலம்  நோயாளிக்கு தற்போது பெருந்தமனி யில் ரத்த ஓட்டம் சீராகவுள்ளது. ரத்தக்  குழாய் வெடிக்கும் அபாயமும் தவிர்க்கப் பட்டுள்ளது. இதேபோல, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த 72 வயது டைய முதியவர் ஏற்கெனவே இதய பை பாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்ட வர். தீராத வயிற்றுவலி காரணமாக தனி யார் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார். இதில், வயிற்றுப் பகுதி யிலுள்ள பெருந்தமனி ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.  இதையடுத்து, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள ரத்த நாள அறுவை சிகிச்சைத் துறையில் பரி சோதிக்கப்பட்ட போது, அது எந்த நேரத்தி லும் வெடித்து ஆபத்தை ஏற்படுத்தும் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, இத்துறையில் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கட்டணமின்றி நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் பெருந்தமனியில் செயற்கை ரத்தக் குழாய் பொருத்தப்பட்டது. இந்த செயற்கை  ரத்தக் குழாய் மூலம் பெருந்தமனியி லிருந்து ரத்த ஓட்டம் இடது காலுக்கு செலுத்தப்பட்டு, ஓப்பன் பைபாஸ் வழியாக  இடது காலிலிருந்து வலது காலுக்கு செயற்கை ரத்தக் குழாய் மூலம் ரத்த ஓட்டம் செலுத்தப்பட்டது. நுண்துளை மற்றும் அறுவை  சிகிச்சை இரண்டும் ஒரே நேரத்தில் செய் யப்பட்டன. தற்போது பெருந்தமனியிலும், இரு கால்களிலும் ரத்த ஓட்டம் சீராகி  ஆரோக்கியமாகவுள்ளார். இந்தச் சிகிச் சைக்கு தனியார் மருத்துவமனையில் ஏறத்தாழ ரூ.10 லட்சம் செலவாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதற்காக ரத்த நாள அறுவை சிகிச் சைத் துறை மருத்துவர்கள், பணியாளர் களை மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆர். பாலாஜிநாதன் பாராட்டினார்.