districts

திருச்சி முக்கிய செய்திகள்

நெல், பருத்தி ஏலம்

பாபநாசம், மார்ச் 10- தஞ்சாவூர் மாவட் டம் பாபநாசம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத் தில் பாரம்பரிய ரக நெல்  ஏலம் நடந்தது. கண்கா ணிப்பாளர் தாட்சாயணி தலைமையில் நடந்த ஏலத்தில், 1840 கிலோ குவிண்டால் கருப்பு கவுனி, கிலோவிற்கு அதிகபட்சம் ரூ.75-க்கும், 63 கிலோ பூங்காறு கிலோ ரூ.40-க்கும், 560  கிலோ அறுபதாம் குறுவை கிலோ ரூ.40-க்கும் விலை போனது. இதன்மூலம் ரூ.2 லட்சத் திற்கு வர்த்தகம் நடந் தது.  இதேபோன்று நடந்த பருத்தி ஏலத்தில், 2  ஆயிரம் கிலோ பருத்தி,  கிலோவிற்கு அதிக பட்சம் ரூ.74.61, குறைந்த பட்சம் ரூ.67.89, சராசரி ரூ.73.89 என விலை போ னது. இதன்மூலம் ரூ.1  லட்சத்து 46 ஆயிரத்துக்கு  வர்த்தகம் நடந்தது.

புதிய குடியிருப்புகள் திறப்பு

பொன்னமராவதி, மார்ச் 10 - புதுக்கோட்டை மாவட் டம் பொன்னமராவதி அருகே காட்டுப்பட்டி ஊராட்சியில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ரூ.27.06 கோடி மதிப்பீட்டில் கட்டி  முடிக்கப்பட்டுள்ள 264  குடியிருப்புகளை தமிழக  முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்தார். தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பய னாளிகளுக்கு குடியிருப் புக்கான சாவி மற்றும்  ஆணையை வழங்கி னார். ஒன்றியக் குழு  தலைவர் சுதா அடைக் கலமணி, இலுப்பூர் கோட்டாட்சியர் தெய்வ நாயகி, பேரூராட்சி தலைவர் சுந்தரி அழகப்பன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

மக்கள் தொடர்பு முகாம்

புதுக்கோட்டை,  மார்ச் 10- புதுக்கோட்டை வரு வாய் கோட்டம், குளத் தூர் வட்டம், கிள்ளுக் கோட்டை சரகம், செங்களூர் வருவாய் கிராமத்தில் 13.3.2024 (புதன்கிழமை) அன்று காலை 10 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளது.  இம்முகாமை யொட்டி, 11.3.2024 முதல் பொதுமக்களிடமிருந்து முன் மனுக்கள் பெறவுள் ளதால் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொ டர்பாக மனுக்கள் அளித்து பயனடையு மாறு மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரி வித்துள்ளார்.

பணம் திருட்டு

தஞ்சாவூர், மார்ச் 10- தஞ்சாவூர் மாவட்டம் சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் ஏ.இளங்கோ வன் (59). இவர் மாநக ராட்சி அலுவலகத்தில் கணக்குப் பிரிவில் கண் காணிப்பாளராகப் பணி யாற்றி வருகிறார். இவர்  தன்னுடைய சொந்த செலவுக்காக வங்கியி லிருந்து ரூ. 2 லட்சம் எடுத்து, செலவு போக மீதமிருந்த ரூ. 1 லட்சத்து  71 ஆயிரத்து 500 ரொக்கத்தை ஸ்கூட்டர் இருக்கைக்கு அடியி லுள்ள பெட்டியில் வைத்து பூட்டியிருந்தார். இவர் மார்ச் 7 அன்று தெற்கு வீதியிலுள்ள வங்கிக்கு சென்றுவிட்டு மீண்டும் ஸ்கூட்டரை எடுப்பதற்காக வந்தார்.  அப்போது, இருக்கை யின் பூட்டு உடைக்கப் பட்டு, அதில் வைத்திருந்த  பணம் திருட்டு போயிருப் பது தெரிய வந்தது.

அரசுப் பள்ளிக்கு குடிநீர் இயந்திரம் வழங்கல்

பொன்னமராவதி, மார்ச் 10 - புதுக்கோட்டை மாவட் டம் பொன்னமராவதி அருகே உள்ள கருப்புக் குடிப்பட்டி அரசு துவக்கப் பள்ளியில், ஆண்டு விழா, விளையாட்டு விழா மற்றும் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா  நடைபெற்றது.  விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர் இலாஹி ஜான் தலைமை வகித்தார். ஊர் அம்பலம்சின்னு ஊராட்சி  மன்றத் தலைவர் ராமாயி மணி, ஒன்றிய கவுன்சிலர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  தலைமை ஆசிரியர் புவியரசு வரவேற்றார். விழா வில் ரூ.60 ஆயிரம் மதிப் புள்ள குடிநீர் (Hot&Cool) இயந்திரம், பள்ளி மாண வர்களுக்கான 40 இருக்கை கள் உள்ளிட்டவை பொது மக்களால் வழங்கப்பட்டன.

குழந்தை கடத்தல் முயற்சி என  வதந்தி பரப்பியவர் கைது

தஞ்சாவூர், மார்ச் 10  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே குழந்தை யைக் கடத்த முயற்சி நிகழ்ந்ததாகக் கூறி, சமூக வலை தளங்களில் வதந்தி பரப்பிய நபரை காவல் துறையினர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர். பட்டுக்கோட்டை அருகே மல்லிப்பட்டினம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை 9 வயது சிறுமியை அடையாளம் தெரியாத  சிலர் காரில் வந்து கடத்த முயற்சித்ததாக சமூக வலை தளங்களில் வெள்ளிக்கிழமை தகவல் பரவியது. இதுகுறித்து தஞ்சாவூர் சைபர் குற்றக் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் இரா.முத்தமிழ்ச்செல்வன், மாவட்டக் குழந்தைகளுக்கான உதவி கரங்கள் கண்காணிப்பாளர் அஜிதா, ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் ஆகியோர் நேரடி யாகச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், அதுபோன்ற சம்பவம் நிகழவில்லை என்பதும், சம்பந்தப்பட்ட சிறுமி தெரிவிக்காத தகவல்களையும் மிகைப் படுத்தி சிறுமி கடத்தல் என மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த ஜாபர் சாதிக் (38) தன்னுடைய முகநூல் பக்கத்தில் வீடியோ வாக பதிவேற்றம் செய்ததும் தெரிய வந்தது. வதந்தியைப் பரப்பி, மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி யதாக தஞ்சாவூர் மாவட்டக் குற்றப்பிரிவினர் வழக்குப் பதிந்து  ஜாபர் சாதிக்கை கைது செய்தனர்.  இதுபோன்று பொதுமக்களிடையே யாராவது வதந்தி பரப்பினால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் என மாவட்ட காவல் அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுகை மக்கள் நீதிமன்றத்தில்  1,172 வழக்குகளுக்குத் தீர்வு

புதுக்கோட்டை, மார்ச் 10 - புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,172 வழக்கு களுக்கு ரூ.9.65 கோடியில் தீர்வு காணப்பட்டது. தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணையை மாவட்ட முதன்மை நீதிபதி கே.பூரண ஜெயஆனந்த்  தொடங்கி வைத்தார். இதில், மாவட்ட குடும்ப நல நீதிபதி எஸ். ஜெயந்தி, மாவட்ட கூடுதல் நீதிபதி ஜி.எம்.வசந்தி, அத்தியாவசிய பண்டங்கள் சிறப்பு நீதிபதி ஏ.கே.பாபுலால், முதன்மை சார்பு நீதிபதி எஸ்.சசிகுமார், மாவட்ட  உரிமையியல் நீதிபதி டி.பூர்ணிமா, குற்றவியல் நீதிமன்ற  (எண்1) நீதிபதி எம்.ஜெயந்தி, ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி ஏ.பிச்சை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 3,090 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில்,  1,172 வழக்குகளுக்கு ரூ.9.65 கோடியில் தீர்வு காணப் பட்டது. தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணையை  மாவட்ட  சட்டப்பணிகள் ஆணைய செயலர் இ.ராஜேந்திர கண்ணன் ஒருங்கிணைத்தார்.

குழந்தைக்கு பாலியல் தொல்லை: குற்றவாளிக்கு சாகும் வரை சிறை

கும்பகோணம், மார்ச் 10- தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் குழந்தை களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் நோக்கத் தோடு அனைத்துப் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது  இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, காவல் நிலையத் திற்கு வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில் கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 21  அன்று குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த  வழக்கில், கோவிந்தராஜ் என்பவர் கைது செய்யப்பட் டார். இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, குற்றவாளி என  நிரூபிக்கப்பட்டது. மேலும், கோவிந்தராஜனுக்கு சாகும் வரை சிறை தண்டனையும் ரூ.25,000 அபராதமும், பாதிக்கப் பட்ட குழந்தையின் குடும்பத்திற்கு அரசு தரப்பில் ரூ.2.50 லட்சம் நிவாரணமும் வழங்க தஞ்சாவூர் போக்சோ நீதி மன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

மாணவிகளுக்கு சிறப்பு  பேருந்து இயக்க கோரிக்கை 

தஞ்சாவூர், மார்ச் 10- தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அரசு கலை மற்றும்  அறிவியல் கல்லூரி மாணவிகள் பயன்பெறும் வகையில்,  பட்டுக்கோட்டையில் இருந்து மாணவிகளுக்கு சிறப்பு பேருந்து இயக்க வேண்டும் என  பட்டுக்கோட்டை என்கான்ஸ்  சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் சார்பில், தமிழக முதல மைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  பட்டுக்கோட்டை என்கான்ஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு  சங்கத்தின் மார்ச் மாத உறுப்பினர்கள் கூட்டம் ஆலோச கர் வ.விவேகானந்தம் தலைமையில் நடைபெற்றது.  இதில், பட்டுக்கோட்டையில் இருந்து ஒரத்தநாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சிரமம் இல்லாமல் மாணவி கள் செல்லும் வகையில், சிறப்பு பேருந்தை கட்டணத்து டன் இயக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. 

தீக்காயமடைந்த பெண்  உட்பட இருவர் பலி

தஞ்சாவூர், மார்ச் 10- இளைஞர் தற்கொலைக்கு முயன்றதுடன், பெண் மீதும் தீ வைத்த சம்பவத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இருவரும் சனிக்கிழமை உயிரிழந்த னர். தஞ்சாவூர் கரந்தை செல்லியம்மன் கோயில் தெரு வைச் சேர்ந்தவர் சர்மிளா பானு (38). இவரது கணவர் விஸ்வநாதன், இவரை விட்டு பிரிந்து மலேசியாவுக்கு சென்றுவிட்டார். இதனால், சர்மிளா பானு தனது இரு குழந்தைகளுடன் எல்லையம்மன் கோயில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இதனிடையே, இவருக்கும், கணவரின் நண்பரான திருக்காட்டுப்பள்ளி அருகே செந்தலையைச் சேர்ந்த சி. ரவிக்குமாருக்கும் (40) தொடர்பு ஏற்பட்டது. இந்நிலை யில், சர்மிளா பானு சமூக வலைதளம் மூலம் தொடர்பு  கிடைத்த இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த காளி ராஜை 2 ஆவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இதையறிந்து மனமுடைந்த ரவிக்குமார், மார்ச் 2  அன்று இரவு சர்மிளா பானு வீட்டுக்குச் சென்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். பின்னர், வீட்டில் இருந்த மண்ணெண் ணெயை ரவிக்குமார் எடுத்து தன் மீதும், சர்மிளா மீதும்  ஊற்றி, தன் மீது தீ வைத்துக் கொண்டு, சர்மிளா பானுவை கட்டிப் பிடித்தார். இதில் பலத்த காயமடைந்த ரவிக்குமார், சர்மிளா பானு, காப்பாற்றச் சென்று லேசான காயமடைந்த இரு  குழந்தைகள் ஆகியோர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் சர்மிளா பானு, ரவிக்குமார் ஆகியோர் சனிக்கிழமை உயிரி ழந்தனர். இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருப்பணிகள் நிதி வசூல் முறைகேடு: கோவில் செயல் அலுவலர் சஸ்பெண்ட்

திருவில்லிபுத்தூர், மார்ச் 10 விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே  மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோவிலில் கடந்த 2006-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.  16 ஆண்டுகளுக்கு பின் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக ரூ.64 லட்சம் மதிப்பில் திருப்பணிகள் செய்ய அறநிலையத்துறை சார்பில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது.  இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நிதி ஒதுக்கீடு  செய்யப்படாத நிலையில், முழுவதும் உபயதாரர்கள் அளித்த நிதியை கொண்டே திருப்பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில், திருப்பணிகள் செய்வதற்காக பக்தர்  களிடம் ரூ.2 கோடி வரை நிதி வசூல் செய்து முறை கேடு செய்ததாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து அற நிலையத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சிய ரிடம் புகார் அளிக்கப்பட்டது.  இந்நிலையில், வியாழனன்று செயல் அலுவலர்  ஜவகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இதையடுத்து அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை, ஜவகரை இடைநீக்கம் செய்து உத்தர விட்டார்.

கோபாலி மலையில் காட்டுத் தீ

மதுரை, மார்ச் 10-  மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம்  அருகே விளாச் சேரி சௌராஷ்டிரா கல்லூரி பின்புறம் உள்ள கோபாலி கோவில் மலை உள்ளது. இங்குள்ள கபாலீஸ்வரி அம்மன்  கோவிலுக்கு அவ்வப்போது அந்த பகுதி யைச் சேர்ந்த பொதுமக்கள் சென்றுவருவர். இந்த நிலையில், சனிக்கிழமை மதியம் 3  மணி அளவில் திடீரென கோபாலி மலையில் உள்ள மரங்களில் தீ பிடித்து எரிய தொடங் கியது. இந்த தீயானது அடுத்தடுத்த மரங்க ளில் பரவி காட்டுத் தீ பரவியதால் மலை முழு வதிலும் தீப் பிழம்பு கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. மேலும் மலை முழுவதி லும் கடுமையான புகை மூட்டம் பரவி வரு கிறது.  இந்த நிலையில் பெரியார் பேருந்து  நிலைய தீயணைப்புத்துறையினர் மற்றும் தல்லாகுளம் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை  கட்டுக்குள் கொண்டு வருவதற்கான  முயற்சிகளில் ஈடுபட்டனர். பவுடர் மூலமாக  தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். தற்போது காட்டுத்தீ பரவி வருவதால் கோபாலி கோவில் மலையில் பொது மக்கள் செல்வதை தடுப்பதற்காக மலையை  சுற்றிலும் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஓடும் பேருந்தில் நகை மாயம்

விருதுநகர், மார்ச் 10- விருதுநகர் அருகே உள்ள மெட்டுக் குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அனுப் பிரியா (21). இவர் தனது குழந்தையின் கழுத்தில் தங்கச் சங்கிலியை அணி வித்து விருதுநகர் அழைத்து வந்துள்ளார்.  அங்கு ஜவுளி எடுத்து விட்டு விருதுநகர் பழைய பேருந்து நிலையத்திற்கு வந்துள் ளார். பின்பு, காளப்பெருமாள்பட்டி செல்லும்  அரசுப் பேருந் தில் பயணித்தார். அப்போது,  குழந்தையின் கழுத்தில் இருந்த தங்கச்  சங்கிலி மாயமானது தெரிய வந்தது.  இதுகுறித்து அனுப்பிரியா விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.