பட்டுக்கோட்டை, செப்.29 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை வட்டம் சொக்கனாவூர் ஊராட்சி புளியக்குடியில் “மக்கள் நேர்காணல் முகாம்” மாவட்ட ஆட்சி யர் தீபக் ஜேக்கப் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பட்டுக்கோட்டை எம்எல்ஏ கா.அண்ணா துரை முன்னிலை வகித்தார். இம்முகாமில் இலவச வீட்டு மனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 125 மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் வழங்கினர். மேலும், வருவாய் துறை சார்பில் 110 பய னாளிகளுக்கு விலையில்லா வீட்டு மனைப் பட்டா, 10 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணை, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 49 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு அனைத்து விவ சாய பயன்பாட்டு பொருட்கள், தோட்டக் கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 184 பயனாளிகளுக்கு ரூ.20.78 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முன்னதாக ஆட்சியர் தீபக் ஜேக்கப், பல்வேறு துறைகளின் திட்டங்கள், சாதனை கள் குறித்து அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.