தஞ்சாவூர், ஜூன் 19-
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி எம்.எஸ்.விழா அரங்கில், ரோட்டரி சங்கம் நிர்வாகிகள் பணியேற்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆளுநர் ஏ.கே.எஸ்.எஸ்.பாலாஜி, சென்னை மாநிலக் கல்லூரி பேராசிரியரும், வானொலி, தொலைக் காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருமான இரா.ஜோதிபாசு ஆகி யோர் கலந்து கொண்டு பேசினர்.
துணை ஆளுநர் எஸ். பைசல் அகமது புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வைத்து பேசினார். தலைவராக எஸ்.சரவணன், செயலாளராக மரு கே. முத்துக்குமார், பொருளாளராக எஸ்.சதீஷ் குமார் ஆகி யோர் பணியேற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங் கப்பட்டன. நிகழ்வில் உடனடி முன்னாள் தலைவர் பொறி யாளர் எம்.திருப்பதி, ரோட்டரி சங்க நிர்வாகிகள், உறுப்பி னர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்