தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வித்யா பாட சாலையில் இயங்கி வரும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான பகல் நேர பராமரிப்பு மையத்தில் உள்ள 25 மாணவர்களுக்கு, தீபாவளியையொட்டி பாபநாசம் லயன்ஸ் கிளப் சார்பில் புத்தாடைகள், இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் லயன்ஸ் கிளப் தலைவர் அண்ணா செந்தில், செயலர் பன்னீர்செல்வம், வட்டாரத் தலைவர் கணேசன், ஜெகதீசன், மாவட்டத் தலைவர்கள் ஆறுமுகம், முத்தமிழ்ச் செல்வம், கிரீன் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் பரணிதரன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.