தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் - சாலியமங்கலம் சாலை முக்கிய சாலையாகும். இந்தச் சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தச் சாலையில், இடையிருப்பு அருகே சாலையோரம் உள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் இருக்கிறது. விபத்து நேரும் முன் இந்த மின் கம்பம் சீரமைக்கப்படுமா?