தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் - கபிஸ்தலம் பிரதானச் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தச் சாலையில் குடமுருட்டி, திருமலைராஜன், அரசலாற்றின் மீதுள்ள பாலத்தின் சாலை குண்டும், குழியுமாக இருப்பது குறித்து தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து அரசலாறு, திருமலைராஜன் ஆற்றின் மீதுள்ள பாலத்தின் சாலை சீரமைக்கப்பட்டது. செய்தி வெளியிட்ட தீக்கதிருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.