பாபநாசம், மே 7- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள சுந்தரப் பெருமாள் கோவில் புறவழிச்சாலை அருகிலிருந்து அண்டக் குடியை இணைக்கும் வகையில் அரசலாற்றின் குறுக்கே உயர் மட்டப் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலம் மதுப் பிரியர்களின் பாராக மாறி வருகிறது. காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப் பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.