districts

திருச்சி முக்கிய செய்திகள்

மாற்றுத்திறனாளிகள்  சங்க கிளை அமைப்பு 

தஞ்சாவூர், பிப்.4-  தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் ஒன்றியம், வெட்டுவாக்கோட்டை ஊராட்சியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக ளுக்கான சங்கத்தின் புதிய கிளை அமைப்பு கூட்டம் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.  இதில் திருவோணம் ஒன்றியச் செயலாளர் கோவி.ராதிகா நிர்வாகி களை அறிமுகப்படுத்தி பேசினார். தலைவராக சுந்தர்ராஜன், செயலாள ராக செல்வி, பொருளாள ராக சரவணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். உதவித் தொகைக் காக விண்ணப்பித்து காத்திருக்கும் மாற்றுத் திறனாளி களுக்கு உடன டியாக உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு  அலுவலகங்களில் மாற் றுத்திறனாளி களுக்காக சாய்தள நடைபாதை, கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. 

அறிஞர் அண்ணா  நினைவு தினம்

மயிலாடுதுறை, பிப்.4 - மறைந்த தமிழக முன் னாள் முதல்வர் பேரறி ஞர் அண்ணா 55 ஆவது  நினைவு தினத்தை முன் னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் மேலமுக்கூட் டில் உள்ள பேரறிஞர் அண்ணா உருவச் சிலைக்கு பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா எம். முருகன் மாலை அணி வித்து மரியாதை செய் தார். திருக்கடையூரில் உள்ள செம்பனார்கோ யில் மத்திய திமுக ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய செயலாளர் அமுர்த.விஜயகுமார் தலைமையில் ஊராட்சி  மன்றத் தலைவர் ஜெய மாலதி சிவராஜ், வார்டு உறுப்பினர் செந்தில் உள்ளிட்டோர் அண்ணா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரி யாதை செய்தனர்.

மின்சாரம் தாக்கி பசு மாடு பலி

கும்பகோணம், பிப்.4- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பம்படையூர் கிரா மத்தைச் சேர்ந்தவர் சாமி நாதன். இவர் தனக்குச்  சொந்தமான கருவுற்ற பசு மாட்டை தரிசு  நிலத்தில் மேய்ச்சலுக் காக விட்டிருந்தார். அப்போது வயலின் குறுக்கே பழுதடைந்து இருந்த உயர் அழுத்த மின்கம்பி, திடீரென அறுந்து மேய்ந்திருந்த பசு மாட்டின் மேல் விழுந் தது.  இதனால் மின்சாரம் பாய்ந்து பசு மாடு சம்பவ இடத்திலேயே உயி ரிழந்தது. பின்னர் மின்சா ரம் மற்றும் கால்நடை மருத்துவருக்கு தகவல்  தெரிவித்து, உடற் கூறாய்வுக்கு பின் பசு மாடு அடக்கம் செய்யப் பட்டது.

தீப்பற்றி எரிந்த கார்

சாத்தூர், பிப்.4- விருதுநகர் மாவட்டம்  சாத்தூர் அருகில் உள்ள டீ.மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் சங்கரேஸ்வ ரன்.இவருக்கு சொந்த மான காரை உறவினரான  வைரம் எடுத்துக் கொண்டு வைப்பாற்றிற்கு குளிக்கச் சென்றுள்ளார். திரும்பி வரும் போது திடீரென கார் எஞ்சினில் இருந்து புகை  வந்த நிலையில், கார் தீப்பற்றி எரிந்தது. இதில் கார் முற்றிலும்எரிந்து நாசமானது.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட திரு.வி.க கல்லூரி முதல்வர் மீது 5 பிரிவுகளில் வழக்கு

திருவாரூர், பிப்.4 - பணியிடை நீக்கம் செய்யப்பட்ட திருவிக கல்லூரி முதல்வர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்  பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் அருகே கிடாரங்கொண்டான் பகுதியில் உள்ள திருவிக அரசு கல்லூரியின் முதல்வராக கோ.கீதா என்பவர் பணியாற்றி வரு கிறார். கல்லூரி முதல்வர் பொறுப்பில் உள்ள இவர், தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்குநர் கூடு தல் பொறுப்பையும் கடந்த ஆண்டு மார்ச் 31  முதல் வகித்து வருகிறார். இந்நிலையில், இவர் கல்லூரி கல்வி இயக்கு நர் பொறுப்புக்கு வர ரூ.5 கோடி பணம் கொடுத்த தாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் தமிழ் நாட்டில் உள்ள எஸ்சி-எஸ்டி மாணவர்களின் நிதி யில் மோசடியில் ஈடுபட்டதாகவும் புகார்கள் உள்ளதாக தெரிகிறது. இவர் பிப்.2 அன்று திருவிக அரசு கலைக் கல்லூரிக்கு வந்த அலுவலர்களை, பணி செய்ய  விடாமல் தடுத்ததாக தஞ்சை மண்டல கல்லூரி  கல்வி இணை இயக்குநர் தனராஜன், திருவாரூர்  மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் இடை நீக்கம் செய்யப்பட்ட திருவிக கல்லூரி முதல்வர்  கீதா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து திரு வாரூர் தாலுகா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குப்பைகளை தினமும்  அகற்ற நடவடிக்கை

பாபநாசம், பிப்.4 - குப்பைகளை தினமும் அகற்ற நடவடிக்கை எடுக்கப் படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் திருப்பாலைத்துறை குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால், புகை,  துர்நாற் றம் வீசியதைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து பாபநாசம் தாலுகா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. பாபநாசம் தாசில்தார் மணிகண்டன் தலைமை வகித்தார். பாபநாசம் பேரூராட்சித் தலைவர் பூங்குழலி, செயல் அலு வலர் ரவிஷங்கர், இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி, ஆர்.ஐ. சுந்தரேசன் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். குப்பைக் கிடங்கில் உள்ள குப்பைகளை பயோ மைனிக் முறையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மூலம் அளவீடு செய்யப்படும். அவற்றை அரசு நிதி பெற்று ஒப்பந்தப் புள்ளி வழியாக 3, 4 மாத காலத்திற்குள் அகற்ற  நடவடிக்கை மேற்கொள்வது. குப்பைக் கிடங்கில் கொட்டப்ப டும் தினசரி குப்பையை அன்றைய தினமே தரம் பிரித்து, படிப்படியாக குப்பைகளை 2 மாதத்திற்குள் குறைக்க நடவ டிக்கை மேற்கொள்வது என முடிவானது. இதைத் தொ டர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

தொகுப்பு வீடுகளை சீரமைக்க கோரிக்கை

பாபநாசம், பிப்.4 - தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டம் கீழ வழுத்தூர், மேல வழுத்தூர்  கிளை பேரவை நடைபெற்றது. மேல வழுத்தூரில் நடந்த  பேரவைக்கு ஒன்றியப் பொறுப்பாளர் ராஜா தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் இளங் கோவன், துணைத் தலைவர்  அன்புமணி, கிளைச் செய லர் சதாசிவம், கும்பகோணம்  ஒன்றியப் பொருளாளர் மகேஸ்வரி உள்ளிட்டோர் பேசினர். இதில் 1996 ஆம்  ஆண்டு கட்டித் தரப்பட்ட தொகுப்பு வீடுகள் பழுதான தால், புதிய வீடுகளை தர மாக கட்டித் தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிலங்களை அளவீடு செய்ய  இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூர், பிப்.4-  நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு  செய்ய, சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில்  செல்லாமல், https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 20.11.2023 அன்று தொடங்கி வைத்தார்.  இப்புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் எந்நேரத்தி லும், எவ்விடத்திலிருந்தும் நில அளவை செய்ய மற்றும்  நில அளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த, விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. நில அளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ் செய்தி அல்லது அலைபேசி வாயிலாக தெரிவிக்கப் படும். மேலும், நில அளவை செய்யப்பட்ட பின்னர் மனு தாரர் மற்றும் நில அளவர் கையொப்பமிட்ட அறிக்கை,  வரைபடம் ஆகியவற்றை மனுதாரர் https://eservisestn.gov.in/ என்ற இணையவழி சேவை மூலமாக  பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் நில அளவ ரால் பதிவேற்றம் செய்யப்படும். பொதுமக்கள் அனைவரும் இச்சேவையை பயன் படுத்திக் கொள்ளுமாறு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

கடல்பசு பாதுகாப்பு  விழிப்புணர்வு நிகழ்ச்சி

தஞ்சாவூர், பிப்.4-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே புதுப்பட்டி னம் கடலோர கிராமத்தில், தமிழ்நாடு பல்லுயிர் பாது காப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கான பசுமைத் திட்டம் சார்பில் மீனவர்களுக்கு கடல் பசு பாதுகாப்பு தொ டர்பான சமுதாய விழிப்புணர்வு கூட்டம் ஞாாயிற்றுக் கிழமை நடந்தது. இக்கூட்டத்தில், பட்டுக்கோட்டை வனச்சரக அலுவ லர் சந்திரசேகரன் மீனவர்களிடம் பேசுகையில், “அபூர்வ  வகை கடல் வாழ் உயிரினமான கடற்பசு, கடல் வளத்தை  பாதுகாக்கும் முக்கியமான உயிரினமாக திகழ்கிறது. இப்பகுதியில் காணப்படும் இந்த அபூர்வ உயிரினத்தை காப்பாற்றும் வகையில் மனோரா பகுதியை தலைமை இட மாகக் கொண்டு, தமிழ்நாடு அரசு கடற்பசு பாதுகாப்பு மையம் அமைக்க திட்டமிட்டுள்ளது. கடற்பசுவை காப்பாற்றி உயிருடன் கடலில் விட்ட மீனவர்களை பாராட்டு கிறேன். கடற்பசுவின் முக்கியத்துவத்தை உணர்ந்து மீன வர்கள் அனைவரும் அதனை பாதுகாக்க வேண்டும்.  மேலும், மீனவர்கள் வலையில் சிக்கிய அபூர்வ வகை கடல்வாழ் உயிரினமான கடற்பசுவை காப்பாற்றி கடலுக் குள் விடும் மீனவர்களுக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ், பதக்கம் வழங்கப்படும்” என்றார்.  இதில் கிராம மீனவ தலைவர்கள், மீனவர்கள் மற்றும்  பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கழுமங்குடா, செந்தலைவயல், கணேச புரம், வள்ளுவர்புரம், சோமநாதபட்டினம் ஆகிய மீனவ  கிராமங்களில் கடற்பசு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு  நிகழ்ச்சி நடைபெற்றது.

அரசின் நலத் திட்டங்களை நிறைவேற்ற கால அவகாசம் வேண்டும்  நில அளவை அலுவலர்கள் கோரிக்கை

கரூர், பிப்.4 - அரசின் புதிய நலத் திட்டங்களை நிறைவேற்ற கால அவகாசம் தேவை என தமிழ்நாடு நில அளவை அலு வலர்கள் ஒன்றிப்பு சங்கம் கோரியுள்ளது. தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கத் தின் கரூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் மு.மகேந்திரன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ரா.மோகன்ராஜ் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் சி.பாஸ்கர் வேலை அறிக்கையையும், மாவட்டப் பொருளாளர் ந.தமி ழரசன் வரவு-செலவு அறிக்கையையும் முன்வைத்தனர். மாநில பொதுச் செயலாளர் அண்ணா.குபேரன்  கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார். மாநிலத் தலை வர் ஜெ.ராஜா சிறப்புரையாற்றினார். வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.எஸ். அன்பழ கன், அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில துணைத் தலைவர் எம்.சுப்பிரமணியன், முன்னாள் மாவட்டச் செய லாளர் கெ.சக்திவேல் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  களப் பணியாளர்களின் பணிச் சுமையை குறைக்க வேண்டும். அரசின் புதிய திட்டங்களை நிறைவேற்ற உரிய  கால அவகாசம் அளிக்க வேண்டும். தமிழகம் முழுவ தும் நவீன நில அளவை திட்டம் கொண்டு வர வேண்டும்.  நில அளவை துறையை தொழில்நுட்ப துறையாக அறி விக்க வேண்டும். துறையின் கூடுதல் இயக்குநருக்கு அதி காரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1330 குறள்களை முற்றோதல் செய்த மாணவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கல்

விருதுநகர், பிப்.4- விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரங்கில் திருக்குறள் மாணவர் மாநாடு நடைபெற்றது.  இதில் மாநிலம் முழுவதும் திருக்குறள் முற்றோதல் போட்டியில் வெற்றி பெற்ற 108 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் அறிவிப்பு செய்யப்பட்டன. இதில்,தென் மாவட்டங்களைச் சேர்ந்த 31 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் பரிசுத் தொகை, சான்றிதழ்கள் மற்றும் புத்தகங்கள் ஆகியவற்றை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.  அப்போது அவர் கூறுகையில், ‘‘வாழ்க்கை நெறிமுறைகளை கற்றுத் தருவது திருக்குறள். இது ஒரு  அறிவுப் பெட்டகமாகும். இதை கற்போர் அனைவருக்கும் மன நிறைவைத் தருகிறது. ஒழுக்கத்தை கற்றுத்தருவது குறள். அறங்களின் சிறப்பு வாய்மையே என உணர்த்துகிறது. ஈகை புரிவதே மனித மாண்பு எனவும், கற்றக் கல்வியை பிறருக்கு சொல்லிக் கொடுத்தால் மட்டுமே அது முழுமை பெறும் எனக் கூறுவது குறள். மனித சமுதாயத்தின் கலங்கரை விளக்கமாக இருப்பது திருக்குறள் ஆகும். இந்நிலையில், தமிழக அரசு, திருக்குறளை கற்கும் மாணவர்களை ஊக்கப்படுத்த பரிசுத் தொகையை ரூ.15  ஆயிரமாக உயர்த்தியுள்ளது. சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தை பராமரிக்க ரூ.80 கோடியை தமிழக முதல்வர் ஒதுக்கியுள்ளார்’’ என்றார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை வகித்தார்.