தஞ்சாவூர், ஆக.11 -
திருச்சி, தஞ்சாவூர் காவல் சரகத்தில், 267 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 4,192 கிலோ கஞ்சா உட்பட 41 போதைப் பொருட்கள் வெள்ளிக்கிழமை தீயிட்டு அழிக்கப்பட்டன.
திருச்சி சரகத்திற்குட்பட்ட திருச்சி, அரிய லூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் சரகத்திற்குட்பட்ட தஞ்சா வூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கடந்த ஓராண்டில், 267 வழக்குகளில் 4,192 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், வெள்ளியன்று தஞ்சா வூர் மாவட்டம் அயோத்திபட்டியில், ‘போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற இலக்கை அடையும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில், மத்திய மண்டல காவல் துறை தலைவர் கார்த்திகேயன் முன்னிலை யில், போதைப் பொருட்கள் அழிப்பு மையத் தில், பறிமுதல் செய்யப்பட்ட 4,192 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை தீயிட்டு அழித்தனர்.
இந்நிகழ்வின் போது, தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் ஜெயச்சந்தி ரன், திருச்சி சரக காவல்துறை துணைத் தலை வர் பகலவன், தஞ்சாவூர், திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர், திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவர் கார்த்திகேயன் செய்தியா ளர்களிடம் தெரிவித்ததாவது:
மத்திய மண்டலத்தில் 267 வழக்குகளில், 4,192 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன. முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு தனிப்படை அமைத்ததால் தான் இந்த அளவிற்கு கஞ்சா பொருட்கள் பிடிபட்டுள்ளன.
இலங்கைக்கு கடத்திச் செல்வதாக வந்த தகவலின் அடிப்படையில், தஞ்சாவூர், திருவாரூர் நாகை மாவட்டங்களில் சில நேரங்களில், மொத்தமாகவும் கஞ்சா பறி முதல் செய்துள்ளோம். வட மாநிலங்கள், ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்துதான் கஞ்சா வருகிறது. கொலை, கொள்ளை சம்ப வங்கள் கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு குறைவாகத்தான் உள்ளது.
குற்றங்களை தடுப்பதற்கு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக சோதனை சாவடி கள் அமைக்கப்பட்டு, அங்கு நவீன சிசிடிவி, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.