districts

img

பள்ளி திறந்த முதல் நாளிலேயே பாட நூல்கள், குறிப்பேடு வழங்கல்

கரூர், ஜூன் 19 - தமிழ்நாடு முதலமைச்சர், பள்ளி திறந்த  முதல் நாளிலே அனைத்து மாணவர்களுக் கும் இலவச பாட நூல்களை வழங்க உத்தர விட்டதற்கு மாணவ, மாணவியர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். பள்ளி திறந்த முதல் நாளே மாணவர் களுக்கு இலவச பாடநூல் மற்றும் குறிப்பேடு களை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. அதன்படி கரூர் மாவட்டத்தில் தமிழ் மற்றும்  ஆங்கில வழியில் ஒன்றாம் வகுப்பு முதல் 8  ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவி யர்களுக்கு அனைத்து பாட நூல்களும், அனைத்து வகையான குறிப்பேடுகளும், ஓவியப் பயிற்சிக்கான கையேடு, தமிழ்  மற்றும் ஆங்கில கையெழுத்து பயிற்சிக்கான  கையேடுகளையும் வழங்கி உள்ளது. அதேபோல் 9, 10, 11 மற்றும் 12 ஆம்  வகுப்பு படிக்கும் மாணவ-மாணவியர்களுக் கும் தேவையான தமிழ் மற்றும் ஆங்கில வழி முதல், இரண்டாம்  தொகுப்பு பாட புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகள் வழங்கப்பட்டு  உள்ளன.  கரூர் மாவட்டத்தில் உள்ள 8  ஊராட்சி ஒன்றியங்களிலும் அரசு, அரசு நிதி உதவிபெறும் பள்ளிகள் என 751 தொடக்க மற்றும் நடுநிலைப்  பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் யுகேஜி, எல்கேஜி மற்றும்  ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 38,812 மாணவ-மாணவி யர்கள் கல்வி கற்று வருகின்றனர். 6  வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை  உள்ள உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகள் 130 செயல்பட்டு வரு கின்றன. இப்பள்ளிகளில் மொத்தம் 37,250  மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இவர்களுக்கு இரண்டு கோடு நோட்டு கள், 4 கோடு நோட்டுகள், 80 பக்கம் மற்றும் 196 பக்க நோட்டுகள், ரெக்கார்டு நோட்டு கள், கலவை நோட்டுகள் (composition), அட்லஸ் வரைபடம் வழங்கப்பட்டுள்ளது. ஓவிய நோட்டுகள், கணித உபகரண  பெட்டிகள், புத்தகப் பை, கிராப் வரைபடம்,  வண்ண சீருடைகள், மாணவர், மாணவியர் களுக்கான காலணிகள் மற்றும் சாக்ஸ் ஆகியவை தரப் பரிசோதனை முடிந்து விரை வில் வழங்கப்பட உள்ளன. இதற்காக  மாணவ, மாணவியர்கள் தமிழ்நாடு முதல மைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.