திருச்சியில் 2 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள்
திருச்சிராப்பள்ளி, அக்.27 - தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக திருச்சியில் திங்கட்கிழமை முதல் 2 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் செயல்பட தொடங்கும் என அரசு போக்குவரத்துக் கழக அலுவலர்கள் தெரிவித்தனர். தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சியில் அமைந்துள்ள மத்திய பேருந்து நிலையத்திற்கு பண்டிகை காலங்களில் வரும் பயணிகளின் எண்ணிக்கையை சமாளிக்க தேவையான இடமில்லை. எனவே அக்காலக்கட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுவது வழக்கம். அதன்படி வரவிருக்கும் தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்லவிருக்கும் பயணிகளின் வசதிக்காக, திருச்சியில் மன்னார்புரம், சோனா- மீனா திரையரங்கம் வாசல் ஆகிய 2 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைய உள்ளன. இதற்காக அப்பகுதிகளில் தற்காலிகமாக மின் விளக்குகள், பயணிகள் நிழல்குடைகள், கழிப்பறைகள், குடிநீர் தொட்டிகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பேருந்து நிலையங்கள் திங்கட்கிழமை (அக்.28) முதல் செயல்பட உள்ளன. மன்னார்புரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, இராமநாதபுரம், இராமேஸ்வரம் உள்ளிட்ட வழித்தடங்களில் செல்லும் பேருந்துகளும், சோனா - மீனா திரையரங்கப் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, காரைக்கால் வழித்தடங்களில் செல்லவிருக்கும் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. மேலும் மன்னார்புரம் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு பயணிகள் வந்து செல்ல வசதியாக, திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையங்களில் இருந்து நகரப் பேருந்துகள் பயணிகளின் தேவைக்கேற்ப இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர், அக்.27 - அக்.31 தீபாவளி பண்டி கையையொட்டி, பொதுமக்கள் எளிதாக பயணம் செய்ய தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிட்., சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என நிர்வாக இயக்கு நர் இரா.பொன்முடி தெரிவித் துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரி வித்திருப்பதாவது: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து கும்ப கோணம், தஞ்சாவூர் மற்றும் பட்டுக் கோட்டை செல்லும் பேருந்துகள் நடைமேடை எண்.9-லும், மன்னார் குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத் துறைப்பூண்டி, வேதாரண்யம், கரூர் மற்றும் திருச்சி செல்லும் பேருந்துகள் நடைமேடை எண். 5-லும், அரியலூர் மற்றும் ஜெயங் கொண்டம் செல்லும் பேருந்துகள் நடைமேடை எண்.8-லும், புதுக் கோட்டை, காரைக்குடி, இராமநாத புரம் மற்றும் மதுரை செல்லும் பேருந்துகள் நடைமேடை எண்.3-லும் அக்.28 அன்று 225 கூடுதல் பேருந்துகளும், அக்.29 அன்று 730 கூடுதல் பேருந்துகளும், அக்.30 அன்று 680 கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும். திருச்சியிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட் டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய ஊர்களுக்கும், மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஊர்களி லிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக் கோட்டை ஆகிய ஊர்களுக்கும், கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கு அக்.28 அன்று 100 கூடுதல் பேருந்து களும், அக்.29, 30 ஆகிய நாட்களில் 570 கூடுதல் பேருந்துகளும் இயக்கப் படும். அனைத்து முக்கிய நக ரங்களிலிருந்தும், அனைத்து நகர் பேருந்துகளையும் பயணிகளின் பயன்பாட்டிற்கு ஏற்ப இயக்க விரி வான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும், தீபாவளி முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்குச் செல்ல அக்.31, நவ.01, 02 மற்றும் 03 ஆகிய 4 நாட்களில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய் யப்பட்டுள்ளன. பயணிகள் வசதிக்காக கீழ்குறிப் பிட்ட ஊர்களுக்கு செல்லும் பேருந் துகளுக்கு முன்பதிவு வசதி செய்யப்பட்டு வருகிறது. சென்னை - திருச்சி, சென்னை - அரியலூர், சென்னை - ஜெயங் கொண்டம், சென்னை - கும்ப கோணம், சென்னை - தஞ்சாவூர், சென்னை - பட்டுக்கோட்டை, சென்னை - புதுக்கோட்டை, சென்னை - மயிலாடுதுறை, சென்னை - காரைக் குடி, சென்னை - கரூர், சென்னை - இராமநாதபுரம், சென்னை - சிவ கங்கை, சென்னை - வேளாங் கண்ணி, சென்னை - திருவாரூர், கோயம்புத்தூர் - திருச்சி, திருச்சி - இராமேஸ்வரம், திருச்சி - கோயம் புத்தூர். தீபாவளி பண்டிகையை யொட்டி, தங்கள் சொந்த ஊர்களுக் கும் செல்ல வசதியாக பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பயணிகள் www.tnstc.in என்ற இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்ய லாம். மேலும் மொபைல் ஆப் (Mobile App) Android/I phone கைபேசி மூலமாகவும் முன்பதிவு செய்யலாம். பயணிகள் வசதிக்காக, முக்கிய பேருந்து நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள் பணியமர்த்தப் பட்டு பேருந்து இயக்கத்தை ஒழுங்குபடுத்த ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. இச்சிறப்பு பேருந்துகள் வசதியை அனைவரும் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.