districts

img

சமவெளியில் மிளகு சாகுபடி தொழில்நுட்பக் கருத்தரங்கம்

புதுக்கோட்டை, செப்.15 - புதுக்கோட்டையை அடுத்த வம்பனில் மாவட்ட அளவிலான சமவெளியில் மிளகு சாகுபடி குறித்த  தொழில்நுட்ப கருத்த ரங்கத்தினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.  பின்னர் அமைச்சர் பேசுகையில், “தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறையின்  சார்பில், தென்னை சாகுபடி, ஊட்டச்சத்து தளைகள், மிளகு சாகுபடி, மாடித் தோட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள்  விவசாயிகளின் நலனுக்காக மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. அதன்படி மாவட்ட அளவி லான சமவெளியில் மிளகு சாகுபடி குறித்த  தொழில்நுட்ப கருத்தரங்கம்  துவக்கி வைக்கப்பட்டது. மிளகு சாகுபடி பரப்பினை அதிகரித்தல் மற்றும் உயர் தொழில்நுட்பங்கள் மூலம் மகசூல் அதிகரித்தல், விவசாயிகளின் வரு மானத்தை பெருக்கி வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் விதமாக பல்வேறு தொழில் நுட்ப கருத்துகள் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டன. மாநிலத் தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.12,000 மானியத்தில் தென் னங்கன்றுகளும், முதலமைச்சரின் மண்ணு யிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து தளைகளும்,  தேசியத் தோட்டக்கலை இயக்கத்தின்கீழ் ரூ.20,000  மானியத்தில் மிளகு சாகுபடி செய்வதற்கான பயிர்களும், மாநில தோட்டக்கலை வளர்ச்சி  திட்டத்தின்கீழ் மாடித்தோட்டம் அமைப்பதற்கு  மானியத்துடன் கூடிய பெட்டகங்கள் மற்றும்  பல்வேறு நலத்திட்ட உதவிகள் விவசாயி களுக்கு வழங்கப்பட்டன” என்றார்.