தத்தங்குடி ஊராட்சி வீரசோழன் ஆற்றில் புதிய பாலம் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் மயிலாடுதுறை, மார்ச் 11 - மயிலாடுதுறை மாவட் டம் மங்கைநல்லூர் அருகே தத்தங்குடி ஊராட்சியில் புதிய பாலம் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. தத்தங்குடி ஊராட்சி மலைக்குடி பகுதியில் உள்ள வீரசோழன் ஆற்றின் குறுக்கே பெருஞ்சேரி ஊராட்சியை இணைக்கும் வகையில் உள்ள பழமையான பாலம் சிதிலமடைந்து போக்கு வரத்துக்கு வசதியின்றி இருந்தது. இதனால், பொதுமக்க ளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பழமையான பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டுவதற்காக நபார்டு வங்கி ரூ.184 லட்சத்து 95 ஆயிரம் நிதி ஒதுக்கியது. இதை யொட்டி, பாலம் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டும் விழா ஞாயிறன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம், பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா எம்.முருகன் ஆகியோர் பங்கேற்று அடிக்கல் நாட்டி வைத்து பணியை தொடங்கி வைத்தனர்.