தஞ்சாவூர், அக்.3 - தஞ்சாவூர் கதர் அங்கா டியில் மகாத்மா காந்தி ஜெயந்தி மற்றும் தீபா வளி சிறப்பு விற்பனை துவக்க விழா மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரி யங்கா பங்கஜம் தலைமை யில் புதன்கிழமை நடை பெற்றது. இதையொட்டி, மகாத் மா காந்தி திருவுருவப் படத்தினை திறந்து வைத்து மலர் தூவி மாவட்ட ஆட்சி யர் மரியாதை செலுத்தி னார். பின்னர், தீபாவளி சிறப்பு கதர் விற்பனை யினை துவக்கி வைத்து, மாவட்ட ஆட்சியர் தெரி வித்ததாவது, தஞ்சாவூர் மாவட்டத்தி ற்கு நடப்பாண்டு ரூ.120 லட்சம் விற்பனைக் குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள் ளது. குறியீட்டினை அடை வதற்கு எங்கள் கதர் துறை யால் தயார் செய்யப்படும் அசல் வெள்ளி சரிகை பட்டு ரகங்கள், கதர் ரகங்கள், பாலியஸ்டர் ரகங்கள், உல்லன் ரகங்கள் ஆகி யவைகள் வாடிக்கையா ளர்களைக் கவரும் வண்ணம் புத்தம் புதிய வடிவமைப்பில் உள்ளது. மேலும் முழுவதும் சுத்தமான இலவம் பஞ்சி னால் மிக நேர்த்தியாக தயார் செய்யப்பட்ட மெத்தை மற்றும் தலை யணைகள் மெத்தை விரிப்பு கள், கதர் அங்காடியில் இருப்பில் உள்ளது. இவை அனைத்தும் தஞ்சாவூர் கதர் அங்காடியில் கிடைக்கும். கதர் பருத்தி, பட்டு, பாலி யஸ்டர் ரகங்களுக்கு 30 சதம், உல்லனுக்கு 20 சதம் தள்ளுபடி வழங்கப்படு கிறது. பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் நிறு வனங்கள் தங்கள் ஆதர வினை தொடர்ந்து நல்கி, தமிழகத்திலுள்ள நெச வாளர்கள் துயர் துடைக்க வேண்டும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், உதவி இயக்குநர் கோபால கிருஷ்ணன், கே.நடராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன், மேலாளர், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.