districts

img

திடக்கழிவு மேலாண்மையில் சாதித்துக் காட்டும் தரங்கம்பாடி பேரூராட்சி

2004 இல் உலகையே உலுக் கிய சுனாமி பேரழி வின் போது சின்னாபின்னமான நகரங் களில் தரங்கம்பாடி பேரூராட்சியும் ஒன்று. மறு கட்டமைப்பை உருவாக்கி, திறமையான நிர்வாகத்தால் சாதித்து காட்டமுடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் தரங்கம்பாடி. டேனிஷ்காரர்களின் சொர்க்க பூமி, தமிழ் மொழியை முதன் முதலாக  காகிதத்தில் அச்சு இயந்திரம் மூலம்  அச்சடித்து உலக அரங்கில் உயர்த்திய  தமிழறிஞர் சீகன்பால்கு வாழ்ந்து மறைந்த ஊர். முதல் தமிழ் நாவலா சிரியர், கவிஞர், முதல் இந்திய தமிழ்  நீதிபதி மாயூரம் வேதநாயகம் முதன் முதலாக பணியமர்த்தப்பட்ட நீதி மன்றம் அமைந்துள்ள ஊர். ஓசோன் வாயு கலந்த காற்று வீசும் ஊர் என எண்ணற்ற சிறப்புகள் உள்ளது  போலவே திடக்கழிவு மேலாண்மையால் சிறந்து விளங்கும் பேரூராட்சி என்ற  மற்றொரு அடையாளமும் தரங்கம் பாடிக்கு உண்டு. இதன் தலைவராக கல்வியாளர் சுகுணசங்கரி குமரவேல் என்பவரும், செயல் அலுவலராக பூபதி. கமலக்கண்ணன் என்பவரும் பொறுப்பு  வகிக்கின்றனர்.  இப்பேரூராட்சி சுமார் 25 ஆயிரத் திற்கும் அதிகமான மக்கள் தொகைக்  கொண்டது. பொறையார், தரங்கம்பாடி  என்கிற இரு பெரிய பகுதியை உள்ள டக்கிய சிறப்புநிலை பேரூராட்சியாகும். பெரும் பகுதி கடலோர கிராமங்கள் என்ப தால், சவாலான பேரிடர்களை ஒவ்வொரு ஆண்டும் சந்தித்தாலும், அதி லிருந்து எப்படி மீளுவது என்பதை மிக நேர்த்தியாகவே கையாளுகின்றனர்

பம்பரம் போல சுழலும் தூய்மைப் பணியாளர்கள்

குறிப்பாக 2009 ஆம் ஆண்டு இன்டெக் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளை ஆரம்பித்தது. ஆரம்ப  காலத்தில் 9 வார்டுகளில் மட்டுமே துவங் கப்பட்ட இத்திட்டம், இன்று தமிழகத் திற்கு முன்மாதிரியாக உள்ளது. விடியற் காலை நேரங்களில் தரங்கம்பாடி பேரூ ராட்சிக்குட்பட்ட பகுதிகளில் எங்கு சென் றாலும் அங்கே தூய்மை பணியா ளர்கள் பச்சைநிற ஆடை அணிந்து ஒவ்வொரு வீடாக சென்று மணி ஓசை எழுப்பி, ஏற்கனவே பேரூராட்சியால் வீடு கள் தோறும் வழங்கப்பட்ட கூடைகளில் சேர்த்து வைத்திருக்கும் குப்பைகளை யும், பல்வேறு கழிவுப் பொருட்களையும் தரம்பிரித்து “மக்கும் குப்பை, மக்கா குப்பை” என இடைவிடாது வாங்கி வரு கின்றனர். நிரந்தரப் பணியாளர் 19 பேர் உள்பட 60 ஒப்பந்த மகளிர் பணியாளர்களால் 6,025 குடியிருப்புகள், 776 வணிக நிறு வனங்களில் தினசரி கழிவுகளை தரம் பிரித்து சேகரிக்கப்படும் ஒட்டுமொத்த குப்பைகளும், பொறையார் அய்யனார் கோவில் அருகே சுமார் 6 ஏக்கர் நிலப் பரப்பில் அமைந்திருக்கும் ‘வளம் மீட்பு  பூங்கா’விற்கு பிரத்யேகமாக வடிவ மைக்கப்பட்ட நவீன லாரிகளிலும், 32 தள்ளுவண்டிகள் மூலமும் எடுத்து வரு கின்றனர். 

உரமாக்கப்படும் குப்பைகள்

குப்பைகளெல்லாம் ஏற்கனவே மலைபோல் குவிந்து கிடக்கும் மேடு களில் கொட்டப்படும். மாநகராட்சி, நக ராட்சி, பேரூராட்சிகளுக்கு மத்தியில் ஒவ் வொரு நாளும் லாரிக்கணக்கில் வரும் குப்பைகளெல்லாம் எங்கே என்று கேட்க வைக்கும் அளவிற்கு குப்பைகளை நேர்த்தியாய்  தனித்தனியாக வகைப்  பிரிக்கின்றனர். ஓரிரு மணி நேரங்க ளில் அவையெல்லாம் தனித்தனி பகுதி களுக்கு சென்று விடுகிறது.  காகிதம், இலை, தழைகள் உள்ளிட்ட  மக்கும் குப்பைகளெல்லாம் பிரம்மாண்ட  கூரைகளுக்கு கீழ் ஒரே வரிசையாக படுக்கையாக்கப்படுகிறது. மக்கும் குப்பைகள், அசிட்டிக் அமிலம் உள்ள பழங்கள் தவிர்த்து மற்ற அழுகிய பழங்கள்,  தோல்கள் ஆகிய வீணாகிய கழிவுகள் 45  நாட்களுக்கு உரப்படுக்கை அமைத்து, மக்க வைக்கப்படுகின்றன. மக்கும் கழிவுகள் வெயிலில் நன்கு  உலரவைத்து உரம் சலிக்கும் இயந்தி ரத்தின் மூலம் நன்கு சலித்தெடுத்து உரமாக்கப்படுகிறது. தயார் செய்யப்ப டும் உரங்கள் கிலோ ரூ.5-க்கு விற் பனை செய்யப்படுகிறது. அதேஇடத்தில் இயற்கை முறையில் கீரை வகைகள், காய்கறி, பழங்களும் பயிரிடப்பட்டு அவையும் சந்தைப்படுத்தப்படுகிறது. பூங்கா முழுவதும் அழகுச்செடிகளால் மிளிர்கிறது. குப்பை கிடங்கு போல் அல்லாமல் வண்ணமயமாக மனங்களை  கவரும் விதமாக உள்ளது வளம் மீட்பு பூங்கா.

மண்புழு உரம் தயாரித்தல்

இயற்கை முறையில் தயாரிக்கப்ப டும் உரங்களைக் கொண்டு மண்புழு உரம் தயாரிக்கப்படுகிறது. 5 செ.மீ உய ரத்தில் செங்கல் படுக்கையும், அதனை யடுத்து 5 செ.மீ உயரத்திற்கு மணல் படுக் கையும், அதே அளவில் சாணப்படுக் கையும் (மாட்டு சாணம்) அமைத்து 5 செ.மீ உயரத்திற்கு இயற்கை உரத்தினை  படுக்கையாக அமைத்து அதில் மண்புழுக் கள் விடப்பட்டு அதே அளவிற்கு சாணத் தினை அதில் போட்டு வைத்து பின்னர்  ஈரப்பதத்தில் உரப்படுக்கை பராமரிக்கப் படுகிறது.  இவ்வாறு மண்புழு உரப்படுக்கை அமைக்கும் போது 30 நாட்கள் கழித்து  மண்புழுக்களின் கழிவுகள் வெளியா கும். அவைதான் மண்புழு உரமாக தயார் செய்யப்பட்டு, கிலோ 8 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோழி இறைச்சி கழிவுகளிலிருந்து ‘உரம்’ பர்க்கர் முறையில் 4 அடி உயரம், அகலம் மற்றும் கொள்ளளவில் ஹனி கோம்ப் தொட்டி அமைக்கப்பட்டு சாணப்படுக்கை, வைக்கோல் படுக்கை,  அதன் மேல் கோழி இறைச்சி கழிவுகள்  போடப்படுகிறது. அதற்கு மேல் 6 இன்ச் அளவிற்கு வைக்கோல் கோழி இறைச்சி கழிவுகளை 60 நாட்கள் மக்க வைத்து தயாரிக்கப்படும் உரமும் கிலோ ஒன்று ரூ.10-க்கு விற்கப்படுகிறது. மாதந்தோறும் 2500 டன் உரங்கள்  உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனையாக்கி வருமானம் ஈட்டுகிறது.

மக்காத கழிவுகள்

பேரூராட்சி பகுதி முழுவதும் சேகரிக் கப்படும் பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத குப்பைகள், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட நவீன  எந்திரம் மூலம் பேக்கிங் செய்யப்படுவ தோடு, தேவைப்படும் போது பிளாஸ் டிக்குகளை இயந்திரம் மூலம் தூளாக்கி சாலை அமைக்கும் பணிக்கு ரூ.25-க்கு  விற்கப்படுகிறது. மேலும் மக்காத வாழை  மரங்களை இயந்திரம் மூலம் தூளாக்கி உரப்படுக்கை அமைக்கப்படுகிறது. பேரூ ராட்சி முழுவதும் சுற்றி வந்தாலும் குப்பை  மேடுகளையும், கழிவுகளையும் எங்கும்  பார்க்க முடியாத அளவிற்கு திடக்கழிவு மேலாண்மை திட்டம் சிறப்பாக செயல்படு கிறது. அத்தோடு, அதேப் பகுதியில் மியோ வாக்கி முறையில் குறுங்காடுகள் அமைக் கப்பட்டு தற்போது அந்த மரங்க ளெல்லாம் செழுமையாக வளர்ந்து கையசைப்பது போலவே உள்ளது. மேலும் வளம் மீட்பு பூங்காவின் ஒரு பகுதியில் 5,040 சதுர அடி பரப்பளவில் சமுதாய தோட்டம் அமைத்து பொது மக்களை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுத்த உள்ளதாக கூறப்படு கிறது.  தமிழ்நாடு முழுவதும் ஏராளமான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் இயங்கி வந்தாலும், தரங்கம்பாடி பேரூ ராட்சியால் நிர்வகிக்கப்படும் “வளம் மீட்பு பூங்கா”வில் பயனற்ற இதர பொருட் களான கண்ணாடி குடுவைகள், காலி யான மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் குடு வைகள், குடக்கல், அம்மிக்கல், டயர்கள்  ஆகியவற்றை கொண்டு வண்ண மடித்து, ஓவியம் தீட்டி, அழகுபடுத்தி பூங்காவின் ஒவ்வொரு இடங்களிலும் அமைத்து ஆச்சரியப்படுத்துகின்றனர்.  திருவாரூர், நாகை, தஞ்சாவூர்  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களி லுள்ள பேரூராட்சிகள் தரங்கம்பாடியில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தினை நேரில்  வந்து பார்வையிட்டு, செயல்முறை களை ஆய்வு செய்து பயிற்சி பெற்றுச் செல்கின்றன. குப்பைகளையும், கழிவுகளையும் ஆங்காங்கே குவித்து வைத்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி பொதுமக்களின் நலனை கேள்வி குறியாக்கும் ஒரு சில பேரூராட்சிகளுக்கு மத்தியில், குப்பை களை எல்லாம் உரமாக்கி, காசாக்கி வரு மானத்தை பெருக்கும் தரங்கம்பாடி பேரூராட்சியின் அசாத்தியமான செயல் பாடுகளை தமிழக அரசு ஊக்குவித்து சிறப்பு திட்டங்களை தரங்கம்பாடிக்கு ஒதுக் கினால், இன்னும் கூடுதலாக திடக்கழிவு  மேலாண்மையில் சிறந்து விளங்கும் என்பதில் சந்தேகமில்லை. -

செ.ஜான்சன்