தஞ்சாவூர், நவ.13 - தஞ்சாவூர் மாவட்ட போக்குவரத்து அரங்க மாநாடு செவ்வாய்க்கிழமை இடைக்குழு உறுப்பினர் ஜி. மணிமாறன் தலைமையில் துவங்கியது. புதிய இடைக்கமிட்டி கமிட்டி செயலாளராக சா.செங்குட்டுவன் உட்பட 6 பேர் கொண்ட இடைக்குழு தேர்வு செய்யப்பட்டது. அரசு விரைவுப் போக்கு வரத்து கழகம் (கும்பகோ ணம்) பணிமனை இட மாற்றம் செய்யப்பட்டு, 9 ஆண்டுகள் கடந்த பின்பும் பணிமனையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த வில்லை. மழைக் காலத்தில் சேறும் சகதியுமாகவும், கோடையில் புழுதியாகவும் உள்ள நிலை தொடர்கிறது. இதனை சரிசெய்ய நடவ டிக்கைகள் எடுக்க வேண்டும். அரசு போக்குவரத்து கழகம் தஞ்சை பணிமனை யில் இருந்து, இரவு நேரத்தில் தனியாருக்கு ஆத ரவாக குறைவாக பேருந்து இயக்கப்படுகிறது. மேலும், இரவில் இயக்கப்படும் தொலை தூரப் பேருந்துகள் நிறுத்தப் பட்டுள்ளன. நிறுத்தப்பட்ட தொலைதூர பேருந்துகளை மீண்டும் இயக்கிட வேண்டும். பேருந்து நிலைய முகப்பில் கழிவு நீர் தேங்கு வதை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.