தஞ்சாவூர், நவ.1 - தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவர்கள் என போலியான அடையாள அட்டையை வைத்துக் கொண்டு, நோயாளிகளை மூளைச்சலவை செய்து தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் கும்பல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சா வூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை முதல்வர் பாலாஜிநாதன் எச்ச ரிக்கை விடுத்துள்ளார். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். இந்நிலையில், சிலர் போலியான அடையாள அட்டை களை வைத்துக்கொண்டு, மருத்து வக் கல்லூரிக்கு வரும் நோயாளி களிடம் விரைவில் ஸ்கேன், அறுவை சிகிச்சை செய்யப்படும் என தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல் லும் நோக்கில் மூளைச்சலவை செய் யும் கும்பல் அதிகரித்துள்ளது. இதுகுறித்து அறிந்து மருத்து வக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் பணிபுரியும் பணியாளர்கள் போன்று, நோயாளிகளிடம் ஸ்கேன், இரத்தப் பரிசோதனைகள், அறுவை சிகிச்சை சீக்கிரமாக செய்யப்படும் என கூறி பணம் பெற்றுக் கொண்டு மோசடி வேலை நடக்கிறது. மேலும், நோயாளிகளை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கட்டாயப்படுத்தி அழைத்துச் செல் லும் முயற்சிகள் நடப்பதாக தெரிய வருகிறது. எனவே, மருத்துவமனை யில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் இதர பணியாளர்கள் தங்க ளது பணி நேரத்தில் அடையாள அட்டை மற்றும் சீருடையுடன் பணி புரிய வேண்டும். மேலும் இதை தடுப் பதற்காக, 9626369366 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்க லாம்” என கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வட்டாரத்தினர், “மருத் துவமனையில் வேலை பார்க்கும் பணியாளர்கள் சிலர், நோயாளியிட மும் அவர்களது உறவினரிடமும் இங்கு இருந்தால் சரியாக பார்க்க மாட்டார்கள். இங்கு வரும் மருத்து வர்கள் சிலர் தனியாக மருத்துவமனை நடத்தி வருகின்றனர். அங்கே சென் றால் நன்றாக கவனிப்பார்கள் என மூளைச் சலவை செய்து, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கமிஷன் வாங்கி கொள்வது நடக் கிறது. கடந்த காலங்களில் இருந்த மருத்துவக் கல்லூரி முதல்வர்களிடம் பலர் சிக்கினர். அவர்களிடம் விசா ரணை நடத்திய போது, ஒரு நோயா ளியை குறிப்பிட்ட தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பினால், ரூ.20 முதல் 30 ஆயிரம் அந்த மருத்துவர்கள், கமி ஷன் கொடுத்தது எல்லாம் நடந்துள் ளது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்த னர்.