தஞ்சாவூர், மார்ச் 27- தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ச.முரசொலி புதன் கிழமை தனது வேட்பு மனுவை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சிய ருமான தீபக் ஜேக்கப்பிடம் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் பகுதியில் புதனன்று மாலை இந்தியா கூட்டணி சார்பில், தஞ்சை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ச. முரசொலி தனது பிரச்சாரத்தை துவக்கி னார். முன்னாள் ஒன்றிய நிதித் துறை இணை அமைச்சரும், தஞ்சை நாடாளு மன்ற உறுப்பினரும், திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினருமான ச.சு.பழநிமாணிக்கம் பிரச்சார பய ணத்தை துவக்கி வைத்துப் பேசினார். தஞ்சை மத்திய மாவட்ட திமுக செய லாளர் துரை.சந்திரசேகரன் எம்எல்ஏ, தஞ்சாவூர் எம்எல்ஏ டி.கே.ஜி.நீலமே கம், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் எஸ். எம்.ஜெயினுலாபுதீன் மற்றும் கூட்ட ணிக் கட்சி தலைவர்கள், கட்சியினர் பிரச்சார பயணத்தில் பங்கேற்றனர்.