தஞ்சாவூர், ஜூலை 3 - தஞ்சாவூர் மாநகராட்சி அரண் மனை வளாகத்தில், தஞ்சாவூர் புத்தகத் திருவிழா ஜூலை 19 முதல் 29 வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது. 7 ஆவது தஞ்சாவூர் புத்தகத் திருவிழாவையொட்டி, விழாவிற் கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரண்மனை வளாக மைதா னத்தில் புத்தகத் திருவிழாவிற்கான அரங்கு கள் அமைத்தல், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடு பணிகள் குறித்தும், அரண்மனை வளாகம் கலைக் கூடத்தில் மேம்பாட்டுப் பணிகள் குறித்தும், சரஸ்வதி மகால் நூலகத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் பார்வை யிட்டார். பின்னர், சத்திரம் நிர்வாகத்திலுள்ள அரசர் மேல்நிலைப் பள்ளியிலும், திருவை யாறு அரசர் கலைக் கல்லூரியிலும் மேம் பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும் தஞ்சாவூர் மாநகராட்சி மைய நூலகத்தில் மாணவர்கள் போட்டித் தேர்வு களுக்கு தயார் செய்யும் பணியில் உள்ளதை யும் ஆய்வு மேற்கொண்டார்.