மயிலாடுதுறை, ஜூலை 19 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொன்விழா ஆண்டு, சிந்து சமவெளி நூற்றாண்டு பயிற்சி முகாம் மற்றும் கலை இலக்கிய இரவு 2024 ஆகிய நிகழ்ச்சிகள் மயிலாடுதுறையில் ஆகஸ்ட் 24, 25 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளன. இதற்கான வரவேற்புக் குழுக் கூட்டம் மயிலாடுதுறை வருவாய்த்துறை சங்க அலு வலக கட்டிடத்தில் மாவட்டத் தலைவர் நா. ராசாராமன் தலைமையில் நடைபெற்றது. நன்னானே ரமேசுவின் கிராமிய பாடல்களோடு துவங்கிய கூட்டத்தில் மாநில துணைச் செயலாளர் களப்பிரன், சிந்து சமவெளி நூற்றாண்டு பயிற்சி முகாம் நடத்துவதின் தேவை மற்றும் முக்கியத்துவம் பற்றி பேசி னார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ப.பால சுந்தரம் முப்பெரும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை பற்றி பேசினார். பொன்விழா ஆண்டை கொண்டாடும் வகையில் கூட்டத்தில் பங்கேற்ற சங்கத்தின் மூத்த ஆளுமை களுக்கு புத்தகங்கள் வழங்கி கௌரவிக்கப் பட்டனர். நிகழ்ச்சியில் அமைப்பின் முன்னணி ஊழியர்களுக்கு புத்தகம் வழங்கப்பட்டது. பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் தங்களு டைய ஆலோசனைகளை வழங்கினர். வரவேற்புக் குழு தலைவராக து.இள வரசன், செயலாளராக ப.பாலசுந்தரம், பொருளாளராக நா.வெற்றிவேந்தன் உட்பட 51 பேர் கொண்ட வரவேற்பு குழு அமைக்கப் பட்டது. வரவேற்புக் குழுவின் தலைவர் து. இளவரசன் நன்றி கூறினார்.