தமிழ் பல்கலை. மாணவர்களுக்கு விண்ணப்பம் வழங்கல்
தஞ்சாவூர், மே 11 - தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2024-2025 ஆம் கல்வி யாண்டிற்கான விண்ணப்பப் படிவம் வழங்கும் நிகழ்வை பதிவாளர் (பொ) முனைவர் சி.தியாகராஜன் துவங்கி வைக்கப்பட்டது. அப்போது துணைப் பதிவாளர் கோ.பன்னீர்செல்வம், மக்கள் தொடர்பு அலுவலர் முனைவர் இரா.சு.முருகன், கண்காணிப்பாளர் தே.ரேவதி மற்றும் சேர்க்கைப் பிரிவுப் பணியாளர்கள் உடனிருந்தனர். முதல் விண்ணப்பத்தை இ.நிர்மலா என்பவர், ஒருங்கி ணைந்த ஐந்தாண்டு முதுகலை வரலாறு பட்டப் படிப்பிற் கான விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்டார். மேலும், வளாகக் கல்வி வாயிலாக ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுகலைப் பட்டப் படிப்பு, முதுகலைப் பட்டப் படிப்பு, முதுகலை அறிவியல், MSW, MFA, MPA, முதுநிலைப் பட்டயம், பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்பு களுக்கு விண்ணப்பிக்க www.tamiluniversity.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம் எனவும் தெரி விக்கப்பட்டது.
குடியரசு ஏடு நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம்
பாபநாசம், மே 12 - சுய மரியாதை இயக்கம், குடியரசு ஏடு நூற்றாண்டு விழா பரப்புரை பொதுக் கூட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு மருத்துவமனை அருகில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் பூவா னந்தம் தலைமை வகித்தார். முன்னதாக நகரத் தலைவர் இளங்கோவன் வரவேற்றார். பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் மோகன், ஒன்றியச் செயலாளர் கலிய மூர்த்தி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் திரு ஞானசம்பந்தம், குடந்தை மாவட்டத் தலைவர் நிம்மதி, மாவட்டச் செயலாளர் துரைராசு, பாபநாசம் நகரச் செயலா ளர் வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைக் கழகப் பேச்சாளர் புலிகேசி, மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் சிறப்புரையாற்றினர். இதில் தலைமைக் கழக அமைப்பாளர் குருசாமி, ஒன்றிய அமைப்பாளர் ராஜராஜன், ஒன்றிய இளைஞரணித் தலை வர் முத்துராஜா, ஒன்றிய துணைத் தலைவர் கைலாசம், பகுத்தறிவாளர் கழகம் ஜெயராமன், ஒன்றிய இளைஞ ரணிச் செயலாளர் லெனின் பாசுகர், காப்பாளர் கோவிந்தன், மாவட்ட தொழிலாளர் அணிச் செயலாளர் பெரியார் கண்ணன், வலங்கைமான் ஒன்றியத் தலைவர் பவானி சங்கர், ஒன்றிய பகுத்தறிவாளர் கழகச் செயலா ளர் சங்கர், வரதராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். ஒன்றிய பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் ராஜீவ் காந்தி நன்றி கூறினார்.
கஞ்சா கடத்திய 3 பேருக்கு சிறை
புதுக்கோட்டை, மே 12 - கார் மூலம் தேனி மாவட்டத்துக்கு 22 கிலோ கஞ்சா கடத்திய 3 பேருக்கு சிறைத் தண்டனையும், அபராத மும் விதித்து புதுக்கோட்டை மாவட்ட அத்தியாவசிய பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. திருச்சி போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறி வுப் பிரிவு போலீசார் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி சமயபுரம் டோல்கேட் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து தேனி மாவட்டத் துக்குச் சென்ற கார் ஒன்றை சோதனையிட்ட போது, அதிலிருந்து 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தேனி மாவட்டம் தேவாரம் மூனாண் டிப்பட்டியைச் சேர்ந்த ஆசை (38), தேனி கேஆர்ஆர் நகரைச் சேர்ந்த ஆர்.புவனேஸ்வர் (34), மூனாண்டிபட்டி யைச் சேர்ந்த பா.குமார் (49) ஆகிய மூவரும் கைது செய்யப் பட்டனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட அத்தியா வசிய பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.கே.பாபுலால் வியாழக் கிழமை தீர்ப்பளித்தார். புவனேஸ்வருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.2 லட்சம் அபராதமும், ஆசை மற்றும் குமாருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை யும் தலா ரூபாய் ஒரு லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக் கப்பட்டது.
கேங்மேன்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தல்
அறந்தாங்கி, மே 12 - புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) பேரவை கூட்டம் கோட்டத் தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட திட்டச் செயலாளர் கு.நடராஜன் முன்னிலை வகித்தார். மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில நிர்வாகி எஸ்.ரங்கராஜன் வாழ்த்திப் பேசினார். மாவட்ட திட்ட தலை வர் சித்தையன், பொருளாளர் ஆறுமுகம், அறந்தாங்கி கோட்ட தலைவர் விஜயகுமார் உள்ளிட்ட மின் ஊழி யர்கள் கலந்து கொண்டனர். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கேங்மேன் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். பகுதி நேரப் பணியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். நிரந்தரப் பணியாளர்களின் தீர்க்கப்படாத கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
மின்னல் தாக்கி பசுமாடு பலி
நத்தம், மே 12- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பட்டணம்பட்டி யை சேர்ந்தவர் ராசு (50). விவசாயி. இவர் சொந்தமாக பசு மாடு வளர்த்து வந்தார். இந்த நிலையில், சனிக்கிழமையன்று அதே பகுதியில் உள்ள காட்டு பகுதியில் மாட்டை மேய்ச்சலுக்காக விட்டி ருந்தார். அப்போது திடீரென்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் பசுமாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கிராம நிர்வாக அலுவலர் சரவணன், குட்டுப்பட்டி கால்நடை மருத்து வர் சுபலெட்சுமி ஆகியோர் விசாரணை நடத்தினர்.
நான் முதல்வன், கல்லூரிக் கனவு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி
தஞ்சாவூர், மே 12- தஞ்சாவூர் மாவட்டத்தில் மார்ச் 2024 இல் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தஞ்சா வூர் மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாக ராஜன் தலைமையில், கல்லூரிக் கனவு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தஞ்சாவூர் மாவட்டத் தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற ஆயிரம் மாணவ, மாணவியர்கள் பங்குபெற்றனர். பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் கல்லூரிக் கனவு கை யேடு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமை வகித்து தொடங்கி வைத்துப் பேசினார். தொடர்ந்து, ஒரத்தநாடு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சஹனாஸ் இலியாஸ் சிறப்புரையாற்றினார். முன்னதாக, தஞ்சா வூர் முதன்மைக் கல்வி அலுவலர் மதன்குமார் வரவேற்றார். தொடர்ந்து மருத்துவம், வேளாண்மை, பொறியியல், மீன்வளத்துறை, கலை மற்றும் அறிவியல் மற்றும் இதர பாடப்பிரிவுகள் குறித்து துறை வல்லுநர்கள் மூலம், உயர்கல்வி பயில்வதற்கான வழிமுறைகள், முதல் தலை முறை பட்டதாரி சான்றிதழ் பெறுவதற்கான வருவாய்த்துறை அலுவலர்களின் ஆலோ சனைகள், வங்கி மேலாளர்கள் வழியே கல்விக் கடன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து தனிநபர் ஆலோசனைகள் வழங்கப் பட்டன. மேலும், அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கும் இந்நிகழ்ச்சியானது யூ டியூப் லிங்க் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப் பட்டது. இதில் சுமார் 5,000 மாணவ-மாணவி கள் பங்கேற்று பயன்பெற்றனர். நமது மாவட்டத்தில் அமைந்துள்ள கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் பாடப்பிரிவுகள் குறித்து பல்வேறு கல்லூரிகளிலிருந்து அரங்கங்கள் அமைக்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப் பட்டன. நான் முதல்வன் திட்டக் கூறுகள் தொடர் பாக நான் முதல்வன் திட்ட மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் பாலாஜி மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார். தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவித் திட்ட அலுவலர் ரமேஷ்குமார் நன்றி கூறினார்.
இன்று கரூரில் கல்லூரி கனவு நிகழ்ச்சி
கரூர், மே 12 - கரூர் மாவட்டத்தில் 2023-2024 ஆம் கல்வி யாண்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவி யர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டுதல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த “கல்லூரி கனவு” என்ற நிகழ்ச்சி மே 13 (திங்கள்) அன்று நடைபெறுகிறது. கரூர் கொங்கு திருமண மண்டபம், புத்தாம் பூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரி, அரசு கலைக் கல்லூரி, அய்யர்மலை, குளித்தலை, செர்வைட் கல்வியியல் கல்லூரி, தோகை மலை, அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கணி யாளம்பட்டி ஆகிய 5 இடங்களில் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. நிகழ்ச்சியில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறைகளைச் சார்ந்த உயர் அலு வலர்கள் மற்றும் துறை வல்லுநர்கள் கலந்து கொண்டு, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளனர். கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக், வேளாண்மை கல்லூரி, மருத்துவக் கல்லூரி, செவிலியர் கல்லூரி, அரசு துறை சார்ந்த மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நலத்துறை, மாவட்ட தொழில் மையம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மாவட்ட திறன் பயிற்சி மற்றும் வங்கிகள் சார்பாக உயர்கல்வி பயில உள்ள மாணவ-மாணவியர்கள் பாடப்பிரிவுகளை அறிந்து கொள்ளும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. இதில் கலந்து கொள்ள விரும்பும் மாண வர்கள், தாங்கள் பயின்ற பள்ளியின் தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு, நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருவதற்கு ஏதுவாக மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்து மூலம் வரலாம் என மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தெரி வித்துள்ளார்.
தொழிற்பயிற்சி படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
திருச்சிராப்பள்ளி, மே 12 - திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள திருச்சி, மணிகண்டம் மற்றும் புள்ளம்பாடி (மகளிர்) அரசு தொழிற்பயிற்சி நிலையங் களில் சேர்ந்திட www.skilltraining.tn. gov.in என்ற இணையதள மூலம் 10.5.2024 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன. மேலும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு நேரில் சென்றும் விண்ணப்பிக்கலாம். தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆகஸ்ட் 2024 முதல் தொடங்கும் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழில்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலைய விவரங்கள், தொழில்பிரிவுகள், இவற்றிற் கான கல்வித்தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு ஆகியவை இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் (Prospectus) தரப்பட்டுள்ளன. மாணவர்கள் இணையதளத்தில் கொடுத் துள்ள அறிவுரைகளை கவனமாக படித்து புரிந்துகொண்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.50. இதை Debit card/ Credit card/ Net Banking/ Gpay வாயிலாக செலுத்தலாம். மதிப்பெண் அடிப்படையில் நடைபெற விருக்கும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்கு பின்னர் இதே இணையதளத்தில் வெளியிடப்படும். அதன்படி மாணவர்கள் மாநில அளவி லான இணையதள கலந்தாய்வில் கலந்து கொண்டு தாங்கள் சேர விரும்பும் தொழிற் பயிற்சி நிலையம் மற்றும் தொழில்பிரிவை தேர்வு செய்யலாம். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயிற்சி பெறும் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள், சீருடை, பாடநூல், வரைபடக் கருவி, காலணி, விலையில்லா பேருந்து அட்டை, மாதாந்திர உதவித் தொகை ரூ.750 மற்றும் 10 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்ற பெண் மாணவி களுக்கு புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் மாதந் தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப் படும். பயிற்சி முடித்த பின் வளாக நேர்காணல் மூலம் நூறு சதவீதம் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும். தனியார் நிறுவனங்க ளில் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி வழங்கப்படும். இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய 7.6.24 கடைசி நாள் ஆகும். மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: திருச்சி - 8667204376, மணிகண்டம் - 9042411348, புள்ளம் பாடி - 9443997026 ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
பாராட்டு விழா
பாபநாசம், மே 12 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பட்டுக் கோட்டை அழகிரி மேல் நிலைப் பள்ளியில் 2023 - 2024 கல்வியாண்டில் பணியாற்றிய ஆசிரி யர்கள், பணியாளர் களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளிச் செயலர் வரதரா ஜன் வரவேற்றார். அறக் கட்டளை தலைமைச் செயலர் கலியமூர்த்தி தலைமை வகித்தார். நிதிச் செயலர் பொம்மி முன்னிலை வகித்தார். அறங்காவலர்கள் அண்ணா துரை, ஆனந்த குமார், பூவானந்தம், திரு ஞான சம்பந்தம், ரஷ்யா, இளவரசி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பள்ளி முதல்வர் தீபக் ஏற்புரையாற்றினார். இதில் ஆசிரியர்கள், பணி யாளர்கள் பங்கேற்றனர். அறக்கட்டளை நிர்வாகச் செயலர் கைலாசம் நன்றி கூறினார்.
பெட்ரோல் டேங்கர் லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து 12 ஆயிரம் லிட்டர் எரிபொருள் வீண்
அரியலூர், மே 12 - அரியலூர் மாவட்டம் தவுத்தாய்குளம் கிரா மத்தில் உள்ள வெங்க டேஷ்வரா பெட்ரோல் பங்கிற்கு, திருச்சியில் இருந்து 4 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் மற்றும் 8 ஆயிரம் லிட்டர் டீசல் ஏற்றி கொண்டு பெட் ரோல் டேங்கர் லாரி வந்தது. இந்த லாரி, வாரண வாசி பிள்ளையார் கோவில் அருகே வளை வில் திரும்பும் போது ஓட்டுநரின் கட்டுப் பாட்டை இழந்து, சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி பள்ளத் தில் கவிழ்ந்தது. இத னால் லாரியில் இருந்த பெட்ரோல் மற்றும் டீசல் முழுவதுமாக தரையில் கொட்டி வீணாயின. இது குறித்து அறிந்த அரிய லூர் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறை யினர் சம்பவ இடத்திற்கு வந்து லாரியில் இருந்து கொட்டிய பெட்ரோல் மற்றும் டீசலால் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
மண்புழு உரம் தயாரிப்பில் வேளாண் மாணவிகள்
தஞ்சாவூர், மே 12- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதி யில் கிராமப்புற வேளாண் மைப் பணியில், ஈச்சங் கோட்டை முனைவர் எம். எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலை யம் மாணவிகள் ஈடு பட்டுள்ளனர். இதனொரு பகுதி யாக பட்டுக்கோட்டை அருகே சிவன்கொல்லை யில் உள்ள ஸ்ரீ அகத்தி யர் மூலிகை வனம் என்ற இயற்கை பண்ணை யில், விவசாயி செல்வ கணபதியை சந்தித்த மாணவிகள் அவரிடம் இயற்கை வழி விவசா யம் குறித்து கேட்டறிந்த னர். இதுமட்டுமின்றி அங்கு அவர் வளர்த்து வரும் மூலிகைச் செடி களின் பயன்கள் குறித்தும் கேட்டு தெரிந்து கொண்ட னர். மேலும், மண்புழு உரம் தயாரிக்கும் முறை குறித்து அறிந்து கொண்டு அதனை அவர் வயலில் மாணவிகள் செயல் படுத்திக் காட்டினர். மண்புழு உரம் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து செயல் வழி விளக்கம் மூலம் வயல் அனுபவமும் பெற்றனர்.
பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள், பயிற்சிகளை தவிர்க்க ஆட்சியர் அறிவுறுத்தல்
மயிலாடுதுறை, மே 12 - வெப்ப அலை வீசுவதால் சிறுவர், சிறுமியரின் நலன் கருதி கோடை விடுமுறை நாட்களில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் எல்லா வகையான பயிற்சிகள், சிறப்பு வகுப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளை தவிர்த்திட வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆட்சியர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில், குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட தீபகற்பப் பகுதிகளில் மார்ச் முதல் மே 2024 வரை அதிகபட்ச வெப்ப நிலை, இயல்பைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும் என்றும், வெப்ப அலை வீசும் நாட்களின் எண்ணிக்கையும் கூடுதலாக இருக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, வெப்ப அலையின் தாக்கம் காரணமாக ஏற்படக் கூடிய பாதிப்புகளை குறைத்திட மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 16.5.2024 வரை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 36-40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வெப்பம் சார்ந்த நோய்களால் பாதிக்கக் கூடிய சூழ்நிலை உள்ளது. வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து சிறுவர், சிறுமியரின் நலனை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் கருதி கோடை விடுமுறை நாட்களில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் எல்லா வகையான பயிற்சிகள், சிறப்பு வகுப்புகள் மற்றும் நிகழ்ச்சிகள் போன்றவற்றை தவிர்த்திட வேண்டும்” என்றார்.
45 பள்ளி வாகனங்களின் தகுதிச் சான்று ரத்து
தஞ்சாவூர், மே 12- தஞ்சாவூர் மாவட்டத்தில், பள்ளி வாகனங்கள் சனிக் கிழமை ஆய்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 45 வாக னங்களின் தகுதிச் சான்று தற்காலிகமாக ரத்து செய்யப் பட்டது. தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் வட்டாரப் போக்குவரத்து மற்றும் சாலை பாது காப்புத் துறை சார்பில், பள்ளி வாகனங்கள் சனிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டன. இதில், பள்ளி வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா, பாதுகாப்பு, தீ தடுப்பு கருவி, முதலுதவிப் பெட்டி போன்றவை சரியாக உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது. தஞ்சாவூர் ஆயுதப் படை மைதானத்தில் மாவட்ட வரு வாய் அலுவலர் தெ.தியாகராஜன் தலைமையில் 235 பள்ளி வாகனங்களும், பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 260 வாகனங்களும், கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் கோட்டாட்சியர் எஸ். பூர்ணிமா தலைமையில் 220 வாகனங்களும் என மொத்தம் 715 பள்ளி வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வில் குறைபாடுகள் கண்டறியப்பட்டதைத் தொ டர்ந்து, தஞ்சாவூரில் 9 வாகனங்கள், பட்டுக்கோட்டையில் 17 வாகனங்கள், கும்பகோணத்தில் 19 வாகனங்கள் என மொத்தம் 45 வாகனங்களின் தகுதிச் சான்று தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. குறைகளை சரி செய்த பின்னர் வட்டாரப் போக்கு வரத்து அலுவலகத்தில் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என அலுவலர்கள் அறிவுறுத்தினர்.
வளர்ச்சித் திட்டப் பணிகள் செயலாக்க ஆய்வு கூட்டம்
திருச்சிராப்பள்ளி, மே 12 - திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் செயலாக்கம் குறித்து அரசுத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்க ளுக்கு ஏற்படும் நோய் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை கள் எடுக்க வேண்டும். மேலும், கோடை காலத்தில் மின்வெட்டு ஏற்படாமலும், பராமரிப்பு பணிகள் ஏதேனும் மேற்கொள்ளவிருந்தால் முன் கூட்டியே அறிவிப்பு செய்து அப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து கோவில்களில் வழிபாட்டிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் அவசர மருத்துவ சேவை கிடைக்க வகை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கோடைகாலத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் தேவையான குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி கால்நடைகளை பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வும் அறிவுறுத்தப்பட்டது. மாவட்டத்தில் பல்வேறு திட்டங்க ளின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.