districts

img

பாரதி இசை, நடன நிறுவனத்துடன் தமிழ்ப் பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம்

தஞ்சாவூர், ஜன.28 - தமிழக அரசின் நிதி நல்கையில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ்ப் பண்பாட்டு மையத்துடன், பாரதி இசை மற்றும் நடன நிறுவனத்துடன் தர வகுப்புகள் மற்றும் சான்றிதழ், பட்டய வகுப்பு கள் நடத்துவதற்குரிய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.  பாரதி இசை மற்றும் நடன நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளாக சிவகங்கை மாவட்டத் தில், இசை நடனப் பணியினை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் வாயிலாக நம்முடைய பழந்தமிழர் கலைகள் கற்பிக்கப்பட்டு பல்வேறு அரங்குகளில் மேடையேற்றப்பட்டு வருகின்றன.  இந்நிறுவனத்தின் வாயிலாக இசை, நடனம் மற்றும் சிலம்பக் கலைகளை தர  நிலையில் கற்பிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக தமிழ்ப் பண்பாட்டு மையத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத் தின் மூலம் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின்  வாயிலாக நடத்தப்படும் குரலிசை, கருவி யிசை, பரதநாட்டியம், நாட்டுப்புறக் கலைகள்,  சிலம்பாட்டம் ஆகிய பாடப்பிரிவுகள் பாரதி இசை மற்றும் நடன நிறுவனம் வாயிலாக நடத்தப்பட்டு, தமிழ்ப் பல்கலைக்கழகம் வழி யாக தேர்வுகள் நடத்தவும், சான்றிதழ் வழங்க வும் வகை செய்யப்படும். தமிழ்ப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் (பொ) க.சங்கர், தமிழ்ப் பல்கலைக் கழக பதிவாளர் (பொ) கோ.பன்னீர்செல்வம், பாரதி இசை மற்றும் நடன நிறுவன இயக்குநர் யுவராஜ் ஆகியோர் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பரிமாற்றிக் கொண்டனர்.  நிகழ்வில் தமிழ்ப் பண்பாட்டு மைய  இயக்குநர் செ.கற்பகம், மக்கள் தொடர்பு அலு வலர்(பொ) இரா.சு.முருகன், இணைப் பேரா சிரியர் இரா.ஆனந்த அரசு, கண்காணிப்பா ளர்கள் இராமகிருட்டிணன், இராஜராஜன் மற்றும் உதவியாளர்கள் கார்த்திகேயன், சித்ரா ஆகியோர் உடனிருந்தனர்.