districts

img

தேசிய போட்டிக்கு தமிழக வீரர்கள் தேர்வு

சின்னாளப்பட்டி, ஜன.17- ஜனவரி 18, 19, 20, 21 ஆகிய  தேதிகளில் அசாம் மாநிலம் கவு காத்தியில் தேசிய அளவிலான ரோல் பால் போட்டி நடைபெற உள்ளது. இதில் தமிழக அணி சார்பாக திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி ராஜன் உள்விளை யாட்டு அரங்கில் பயிற்சி பெற்ற  11 வயதுக்கு உட்பட்ட மாணவ -மாண வியர் கலந்து கொள்கின்றனர். திண்டுக்கல் மாவட்டம் சார்பாக  3 மாணவர்களும், 4 மாணவி களும், திருச்சி மாவட்டம் சார்பாக 2 மாணவர்களும், 2 மாணவிகளும், கோவை மாவட்டம் சார்பாக ஒரு மாணவனும் 5 மாணவிகளும், செங்கல்பட்டு மாவட்டம் சார்பாக 3 மாணவனும், ஒரு மாணவியும், திருவள்ளூர் மாவட்டம் சார்பாக 3 மாணவர்களும் கலந்துகொள்ள உள்ளனர். இவர்களுக்கு உற்சாகமூட்டும் விதமாக வழியனுப்புவிழா சின்னாளப்பட்டிராஜன் உள்விளை யாட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தென் இந்திய ரோல்  பால் செயலாளர் எம்.பி.சுப்ரமணி யம், திண்டுக்கல் மாவட்ட ரோல் பால் செயலாளர் பிரேம்நாத், தமிழ்நாடு ரோல் பால் செயலாளர் கோவிந்தராஜ், கோவை மாவட்ட  ரோல் பால் செயலாளர் ராஜசேகர்,  பயிற்சியாளர் தீபக், மேலாளர் தங்க  லெட்சுமி மற்றும் பெற்றோர்களும் கலந்துகொண்டு வழி அனுப்பி வைத்தார்.