மணிப்பூர் மக்கள் மீதான வன்முறை - கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தியும், சிறுபான்மை மக்கள் மீதான வெறியாட்டங்களை கண்டித்தும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாநில சிறப்புக் கருத்தரங்கம் திருச்சி மாவட்டம் லால்குடியில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் மனித நேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது எம்எல்ஏ உரையாற்றினார். தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.