districts

img

பள்ளியில் தமிழக அரசின் கலைத் திருவிழா

பள்ளியில் தமிழக அரசின் கலைத் திருவிழா பாபநாசம்: தமிழக அரசால் நடத்தப்படும் கலைத் திருவிழா, பாபநாசம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிது.  5 ஆம் தேதி முதல் 8 ஆம்  தேதி வரை நடைபெறும் கலைத் திருவிழாவில் செவ்வாயன்று, பாபநாசம் வட்டார வள மைய த்திற்கு உட்பட்ட அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 9, 10 ஆம் வகுப்பு படிக் கும் மாணவர்கள் பங்கேற்று நாட்டுப் புற நடனம், இசைக் கரு விகள் வாசித்தலில் தங்களது திறனை வெளிப் படுத்தினர்.  இதில் பாபநாசம் பேரூராட்சித் தலைவர் பூங்குழலி, வட்டார வள மைய மேற்பார்வை யாளர் முருகன், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். புதனன்று நடைபெற்ற கலைத் திருவிழாவில் 11, 12 ஆம் வகுப்பு  மாணவர்கள் பங்கேற்றனர். இதில் தமிழ்ப் பல்கலைக் கழகப் பேராசிரியர் நீல கண்டன், கபிஸ்தலம் ஜேக் அண்ட் ஜில் பள்ளி நிர்வாகி மைக்கேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.