புதுக்கோட்டை, அக்.23 - நிலுவையில் உள்ள உறுதி மொழிகள் அனைத்தையும் விரைந்து நிறைவேற்ற வேண்டு மென சட்டப் பேரவை உறுதி மொழிக் குழுத் தலைவர் தி. வேல்முருகன் எம்எல்ஏ அதிகாரி களுக்கு அறிவுறுத்தினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலுவையிலுள்ள உறுதிமொழி களுள் நிறைவேற்றப்பட்டவை மற்றும் பணிகள் நடைபெற்று வருபவை குறித்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழு தலைவர் தி.வேல்முருகன் எம்எல்ஏ (பண் ருட்டி) தலைமையில், மாவட்ட ஆட்சியர் மு.அருணா முன்னி லையில் குழு உறுப்பினர்களுடன் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடை பெற்றது. பின்னர் வேல்முருகன் எம்எல்ஏ தெரிவிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டத்தில், பல்வேறு துறை களில், நிலுவையிலுள்ள உறுதி மொழிகளுள் நிறைவேற்றப் பட்டவை மற்றும் பணிகள் நடை பெற்று வருபவை குறித்து தொடர்புடைய அரசு அலுவலர்களி டம் ஆய்வு நடைபெற்றது. தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையின் நிலுவையிலுள்ள உறுதிமொழிகள் அனைத்தையும் விரைந்து நிறைவேற்றிட தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறி வுறுத்தப்பட்டது” என்றார். சட்டமன்ற உறுப்பினர்கள் ச. அரவிந்த் ரமேஷ் (சோழிங்க நல்லூர்), ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் (விருதுநகர்), சா.மாங்குடி (காரைக் குடி), எம்.கே.மோகன் (அண்ணா நகர்) ஆகியோர் உறுதிமொழிக் குழுவில் இடம்பெற்றிருந்தனர். மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் வந்திதாபாண்டே, புதுக் கோட்டை மாநகர மேயர் திலக வதி செந்தில், சட்டமன்ற உறுப்பி னர்கள் மரு.வை.முத்துராஜா (புதுக்கோட்டை), எஸ்.டி.ராமச் சந்திரன் (அறந்தாங்கி), கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெய லட்சுமி தமிழ்செல்வன், தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவிரி-வைகை-குண்டாறு) ஆர். ரம்யாதேவி, வருவாய் கோட்டாட்சி யர்கள் பா.ஐஸ்வர்யா (புதுக் கோட்டை), ச.சிவக்குமார் (அறந் தாங்கி) உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.
தமிழ்நாடு அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தும்
பீகார், ஆந்திரம் போன்ற மாநிலங்களைப் போல சாதிவாரிக் கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசு நடத்தும் என நம்புவதாக சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுத் தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்தார். புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டியில், “சாதிவாரிக் கணக்கெடுப்பை எடுக்க மாநில அரசு தயங்கவில்லை. முழு விவரப் பட்டியல் ஒன்றிய அரசின் கையில் இருப்பதால், ஒன்றிய அரசுதான் இதைச் செய்ய வேண்டுமென மாநில அரசு கூறுகிறது. இருந்த போதிலும் பிகார், ஆந்திர மாநிலங்களில் சாதிவாரிக் கணக் கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதைப் போல தமிழ்நாட்டிலும் மேற் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். இதுவரை தமிழ்நாடு முதல்வர் அதனை மறுக்கவில்லை. மாநில அரசு கள்ளச் சாராயம் உள்ளிட்ட போதைப் பொருள் விற்ப னையைக் கட்டுப்படுத்தி வருகிறது. அதுபோன்ற செயலில் ஈடுபடுப வர்களை கைதும் செய்து வருகிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து கள்ளச் சாரா யம், போதைப் பொருள் உள்ளிட்டவை ஒழிக்கப்பட வேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு” என்றார்.