தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் தலைமையகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழியை நிர்வாக இயக்குநர் இரா. பொன்முடி தலைமையில் அனைவரும் எடுத்துக் கொண்டனர். பொது மேலாளர் கே.சிங்காரவேலு (கூட்டாண்மை அலுவலகம்), துணை மேலாளர்கள், கிளை மேலாளர்கள், பொறியாளர்கள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில் நுட்ப பணியாளர்கள் அலுவலக பணியாளர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.