கரூர், நவ.14- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் 1 வட்டக் குழுவின் 13 ஆவது வட்ட மாநாடு கரூரில் நடைபெற்றது. மாநாட்டிற்கு வட்டத் தலைவர் ஆர்.சிவக்குமார் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் எல். பாலசுப்பிரமணி மாநாட்டை துவக்கி பேசினார். வட்டச் செயலாளர் ஏ. மகேஸ்வரன், பொருளா ளர் ஜமுனா ராணி ஆகியோர் அறிக்கையை முன் வைத்து பேசினர். சங்கத்தின் முன்னாள் மாவட்டத் தலைவர் எம். சுப்பிரமணியன், மாவட்டத் தலைவர் எம்.எஸ். அன்பழகன் ஆகியோர் மாநாட்டை நிறைவு செய்து பேசினர். புதிய வட்டத் தலைவராக ஆர். சுமதி, செயலாளராக ஜமுனா ராணி, பொருளாளராக தா.பாலசுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினராக சபாபதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கரூர் வழியாக பகல் நேரத்தில் சென்னைக்கு ரயில் இயக்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும், கரூர் மாவட்டத்தில் தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் பெண்கள் அதிக அளவில் பணி செய்வதால் கரூர் மாவட்டத்தில் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.