தஞ்சாவூர், அக்.22 - நியாய விலைக் கடைகள் மூலம் தேங்காய் எண் ணெய் விநியோகம் செய்ய வேண்டுமெனக் கோரி தமிழ்நாடு தென்னை விவ சாயிகள் சங்கம் சார்பில், மாநிலம் தழுவிய ஆர்ப்பாட் டம் செவ்வாயன்று பட்டுக் கோட்டை வருவாய் கோட் டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு தென்னை விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ். வேலுச் சாமி தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் எம்.செல்வம் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி.நட ராஜன், தென்னை விவசாயி கள் சங்க முன்னாள் மாநி லச் செயலாளர் ஆர்.சி. பழனிவேலு, தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், ஒரத்தநாடு என்.சுரேஷ் குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில், மாவட்டக் குழு உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட விவ சாயிகள் கலந்து கொண்ட னர். நியாய விலைக் கடை களில் பாமாயிலுக்குப் பதி லாக தேங்காய் எண் ணெய் வழங்க வேண்டும். தென்னை சார் தொழில் வளர்ச்சிக்காக ஏற்றுமதி வாய்ப்புகளை ஊக்கப் படுத்த வேண்டும். தென்னை யைத் தாக்கும் ஈரோ பைட், கருந்தாழை புழுக்கள், வேர்ப்புழு, வெள்ளை ஈ, கேரளா மற்றும் தஞ்சை வாடல் நோயைக் கட்டுப் படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் துரிதமான நடவ டிக்கை எடுக்க வேண்டும். நோய்களை கட்டுப் படுத்த உரிய மருந்துகளை அறிமுகப்படுத்த வேண்டும். அனைத்து தென்னை மரங்களுக்கும் முழுமை யான பயிர் காப்பீட்டை அமல்படுத்த வேண்டும். கயிறு வாரியம் முறையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னை விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள், தர மான தென்னங்கன்றுகள் வழங்க வேண்டும். பேராவூரணி பகுதியில் கொப்பரைக் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். கொப்பரைக்கு உரிய விலையை நிர்ணயம் செய்து ஆண்டு முழுவதும் கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.