districts

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் அறிவிப்பு

கோவை, ஆக. 7- தமிழக முதல்வர் நாளை (வெள்ளி யன்று) கோவை வருவதையொட்டி அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடை பெற்று வருகிறது என அமைச்சர் முத்து சாமி தெரிவித்தார்.  கலைஞரின் 6 ஆம் ஆண்டு நினைவு  தினத்தையொட்டி, தமிழ்நாடு வீட்டு  வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர் வைத்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி தலைமையில், கோவை மாவட்டச் செய லாளர்கள் நா.கார்த்திக், தொஅ.ரவி ஆகியோர் முன்னிலையில் அமைதி பேரணி சித்தாப்புதூரில் இருந்து துவங் கியது. இந்த பேரணி, விகேகே மேனன்  சாலை வழியாக காந்திபுரம் மத்திய  பேருந்து நிலையத்தில் நிறைவடைந் தது. அங்கு அலங்கரிக்கப்பட்ட கலைஞ ரின் திருவுருவ படத்திற்கு மாலை அணி வித்து மலர் தூவி மரியாதை செலுத் தினர்.  இந்த பேரணியில் பங்கேற்று அமைச்சர் முத்துச்சாமி பேசுகையில், கலைஞரின் மறைவு என்பது இந்தியா  முழுவதும் உள்ள பல்வேறு மக்களுக் கும் சோகத்தை ஏற்படுத்திய நாள். பல் வேறு கிராமங்களிலும் பஞ்சாயத்துகளி லும் கலைஞரின் நினைவு தினத்தை ஒட்டி பொதுமக்கள் அவர்களது உணர் வுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். இன்றைய தினம் அவரது நினைவு  தினம் மட்டுமல்லாமல் அவர் என் னென்ன திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று எண்ணினாரோ அனைத்தையும் பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்க்கிறோம். தமிழக முதலமைச்சர் எடுக்கின்ற அனைத்து முடிவுகளுக்கும் ஒத்துழைப்பு நல்க  வேண்டும் என உறுதிமொழி எடுக்கின்ற காலமாக உள்ளது. பல்வேறு இடங்க ளில் கலைஞரின் சிலை திறக்கப்பட்டுள் ளது. கணியூரில் கலைஞரின் சிலை திறக் கும் பணிகள் நடைபெற்று வரும் நிலை யில், அனைத்து விதமான அனுமதி களையும் உரிய முறையில் பெற்று அந்த  சிலை நிறுவ பெற்றுள்ளது. ஒன்பதாம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருகை புரிந்து அரசு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு அதன் பிறகு அந்த  சிலையை திறந்து வைக்க உள்ளார்.  9 ஆம் தேதி கோவை அரசு கலைக் கல்லூரியில் தவப்புதல்வன் நிகழ்ச்சி யும் உக்கடம் பகுதியில் மேம்பாலம் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. கணியூரில் சிலை மட்டுமல்லாமல்  அங்கு நூலகம் ஒன்றும் அமைக் கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் வரு கையையொட்டி அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக  தெரிவித்தார். இதில், முன்னாள் அமைச்சர் பொங் கலூர் பழனிச்சாமி, மாநகர மேயர் ரங்க நாயகி, துணைமேயர் வெற்றிச்செல் வன், மாவட்ட துணைச்செயலாளர் கோட்டை அப்பாஸ், மாவட்டப் பொரு ளாளர் எஸ்எம்.முருகன், மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமை செயற்குழு  உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர் கள், அணி அமைப்பாளர்கள், துணை  அமைப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.