districts

img

தமிழ் இலக்கிய மன்ற விழா

பொன்னமராவதி, ஆக.29 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே ஆல வயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆலவயல் அரசு மேல்நிலைப் பள்ளியும் பொன்னமராவதி முத்தமிழ் பாசறை யும் இணைந்து தமிழ் இலக்கிய மன்ற விழாவை நடத்தின. விழாவிற்கு முத்தமிழ் பாசறை அறக்கட்டளைத் தலை வர் மாணிக்கவேல் தலைமை வகித்தார். உதவி தலைமை யாசிரியர் கணேசன் வரவேற்றார். பாசறை முன்னாள் தலை வர் மருத்துவர் மதியழகன் இலக்கியப் போட்டிகளில் வெற்றி  பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்  வழங்கினார். தமிழாசிரியர் முருகேசன் சிறப்புரையாற்றி னார். இதில் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழுவினர், பெற்றோர் ஆசிரியர் கழகம், முத்தமிழ் பாசறை  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.