புதுக்கோட்டை, ஆக.18 - எழுத்தாளர் நா.முத்துநிலவன் எழுதிய ‘தமிழ் இனிது’ கட்டுரை நூல் வெளியீட்டு விழா புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், புதுக்கோட்டை தமிழ்ச் சங்கம், வீதி கலை இலக்கியக் களம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய விழா விற்கு தமிழ்ச்சங்கத் தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமை வகித்தார். காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் சொ. சுப்பையா நூலை வெளியிட, கந்தர்வ கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை பெற்றுக் கொண்டார். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் இராசு கவிதைப்பித்தன் சிறப்புரையாற்றினார். முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் கள் சங்க மாவட்டத் தலைவர் ராசி பன்னீர்செல்வன் தொடக்கவுரையாற்றி னார். மாநில துணைத் தலைவர் ஆர்.நீலா நூலை அறிமுகம் செய்து பேசி னார். நூல் குறித்து மருத்துவர் எஸ். ராம்தாஸ், தமுஎகச மாவட்டச் செய லர் ஸ்டாலின் சரவணன், துணைத் தலை வர் சு.மதியழகன், வட்டாரக் கல்வி அலு வலர் அ.ஜெயா, மாவட்டத் தலைவர் ராசி பன்னீர்செல்வன், வாசகர் பேரவைச் செயலர் சா.விஸ்வநாதன், கு.ம. திருப்பதி உள்ளிட்டோர் பேசினர். நூலாசிரியர் நா.முத்துநிலவன் ஏற்புரையாற்றினார். முன்னதாக வீதி ஒருங்கிணைப்பாளர் மு.கீதா வரவேற்க, தமுஎகச மாவட்ட துணைச் செயலா ளர் சு.பீர்முகமது நன்றி கூறினார்.