திருவாரூர், டிச.26 - திருவாரூர் பழைய ரயில் நிலையத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம் குறித்த விழிப்பு ணர்வு பேரணி நடைபெற்றது. ஆட்சி மொழி சட்ட வாரத்தின் ஆறாம் நாள் நிகழ்வாக வியாழக்கிழமை விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமை யேற்று தொடங்கி வைத்தார். பேரணியில் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி, இராபியம்மாள் அகமது மொய்தீன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குளோபல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ-மாணவியர்கள், தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் ச.சீதாலெட்சுமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வ குமார், தமிழ்ச் சங்கங்கள், தமிழ் அமைப்பு கள், தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பேரணியானது, பழைய ரயில் நிலை யத்தில் தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாக வந்து, புதிய ரயில் நிலையத்தில் முடிவடைந்தது.