சிவகங்கை, ஜன.2- சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் தாலூகா சிலுக்கப்பட்டி பகுதியில் மழையில்லாமல் விவசாயம் பொய்த்து போனதால் விவசாயிகளுக்கு பயிர்க் காப் பீட்டுத் தொகை கிடைப்பதற்கு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாவட்டச் செயலாளர் கருப்புச்சாமி (பொ), ஒன்றியச் செயலாளர் தென்னரசு, தமிழ்நாடு விவ சாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் சாத்தப் பன் ஆகியோர் வறட்சி பாதித்த விவசாயி களையும், விவசாய நிலத்தையும் நேரில் பார்வையிட்டனர். இதுகுறித்து பின்னர் மாவட்டச் செயலா ளர் கருப்புச்சாமி (பொ) கூறுகையில், ‘‘சிவ கங்கை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து விவசாயம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால், காளை யார்கோவில் தாலுகா சிலுக்கப்பட்டி, விளங்காட்டூர், கிராம்ளி, பளுர், மருதங்குடி, கல்குளம் உள்ளிட்ட கிராமங்களில் ஆயி ரம் ஏக்கர் விவசாயம் வறட்சியால் பொய்த்து போயுள்ளது. எனவே, வறட்சியால் பொய்த்து போன விவசாயத்திற்கு பயிர் காப்பீட்டுத் தொகை யும், வறட்சி நிவாரணத் தொகையும் விவ சாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்தார். இதுகுறித்து, காளையார்கோவில் வட் டாட்சியரிடம் கேட்டபோது, ‘‘சிலுக்கப்பட்டி பகுதியில் விவசாயம் பொய்த்து போன தொடர்பாக கணக்கெடுத்து, அரசுக்கு வறட்சி நிவாரணம் கேட்டு பரிந்துரைத்துள்ளோம்’’ என்று தெரிவித்தார்.