districts

img

நீடித்த வளர்ச்சி இலக்குகள்: 5 மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

மயிலாடுதுறை, அக்.26 - நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து 5  மாவட்டங்கள் (மயிலாடுதுறை, நாகப்பட்டி னம், திருவாரூர், கடலூர், அரியலூர்) அள விலான ஆலோசனைக் கூட்டம், திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அரசு சிறப்புச் செய லர் ஹர்.சகாய் மீனா தலைமையில் மயிலாடு துறையில் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவ லக கூட்டரங்கில் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அரசு சிறப்புச் செயலர் ஹர்.சகாய்  மீனா தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு  மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் ஆகியோர் முன் னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அரசு சிறப்புச் செயலர் கூறியதாவது: “இந்தியாவில் நிதி ஆயோக் (திட்டக் குழு) வழிகாட்டுதலின்படியும், தமிழ்நாட்டில் மாநில திட்டக்குழுவின் ஆலோசனையின் படியும் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை அலுவலர்களால் நீடித்த இலக்குகள் (எஸ்டிஜி-Sustainabie Development of Goals), 104 மாவட்ட குறியீடுகள் தொடர்பான தரவுகள் 2015 முதல் 21 துறைகளிடமிருந்து பெறப்பட்டு, நீடித்த நிலையான வளர்ச்சி குறி யீட்டிற்கான இணையதளம் மூலம் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியினை வட்டார அளவில் மேற்கொள்வதற்கு ஏதுவாக வட்டார அளவில் ஒருங்கிணைப்புக் குழு, வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் அனைத்து வட்டாரங் களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மயிலாடு துறை மாவட்டத்தில் உள்ள 5 ஊராட்சி ஒன்றியங்களில் வட்டார அளவில் குறியீடு கள் பெறுவது தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநில அரசு மாவட்டங்களின் வளர்ச்சியினை கண்டறிய “மாவட்ட நல்லாட்சி  குறியீடுகள்”  அடிப்படையில் மாவட்டங்களை தரவரிசைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதற்காக 2020-2021  ஆம் ஆண்டினை அடிப்படையாக கொண்டு 75 மாவட்ட நல் லாட்சி குறியீடுகள் தொடர்பான புள்ளி விப ரங்களை சம்பந்தப்பட்ட துறைகளிலிருந்து பெற ஏதுவாக கூட்டம் நடத்தப்பட்டது. அதில் முக்கியத்துவம், தரவுகளின் உண்மைத்தன்மை பற்றி அனைத்து அலுவ லர்களுக்கும் எடுத்துரைக்கப்பட்டது. இதன் மூலம் பெறப்பட்ட தரவுகளை கணினி பதிவு  மேற்கொண்டு பொருளியல் மற்றும் புள்ளியி யல் துறைக்கு அனுப்பி வைத்து, நீடித்த வளர்ச்சி அடைய உரிய நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.