districts

img

நன்னிலத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

திருவாரூர், அக்.22 - திருவாரூர் மாவட்டம்,  நன்னிலம் ஒன்றியத்திற் குட்பட்ட பகுதிகளில் நடை பெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ நேரில் பார் வையிட்டு ஆய்வு செய்தார்.  நன்னிலம் ஒன்றியம், ஆனைகுப்பம் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் (2024-2025) கீழ் பயனாளிகளால் கட்டப்பட்டு வரும் 2 குடியிருப்பு வீடு களையும், தட்டாத்திமூலை ஊராட்சியில் கட்டப்பட்டுவரும் ஒரு குடியிருப்பு வீட்டை யும், சலிப்பேரி ஊராட்சியில் பத்தினியாள் புரம் பகுதிகளில் தலா ரூ.16.75 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியையும், சலிப்பேரி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் (2024-2025) கீழ் கிராம சாலையின் இருபுறமும் மரக்கன்றுகள் (100 மரக்கன்றுகள்) நடும் பணிகள் நடைபெற்று வருவதையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். மேலும்,  பணிகளை விரைந்து முடிக்க அலுவலர் களுக்கு அறிவுறுத்தினார்.   ஆய்வின்போது, நன்னிலம் வட்டாட் சியர் ரஷியாபேகம், வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உட னிருந்தனர்.