புதுதில்லி, செப்.19- `பிளாஸ்டர் ஆப் பாரிஸ்’ சிலை களை விற்க அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, உயர் நீதிமன்ற மதுரை கிளையின் இரு நீதிபதிகள் அடங் கிய அமர்வு பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள் ளது. இராஜஸ்தானைச் சேர்ந்த பிரகாஷ், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: காவல்துறையினரும், வரு வாய்த்துறை அதிகாரிகளும் விநா யகர் சிலைகளை விற்கக் கூடாது என உத்தரவிட்டு எனது கடைக்குச் சீல் வைத்தனர். நான் தயாரித்துள்ள சிலைகளால் நீர் நிலைகளில் மாசு ஏற்படாது. இதுகுறித்து போதுமான விளக்கம் அளித்தும் சிலைகளை விற்க அனுமதிக்கவில்லை எனக் கூறியிருந்தார். இம்மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் முன்பு விசாரணைக்கு வந் தது. அப்போது, மனுதாரர் அனு மதிக்கப்பட்ட அளவில் `பிளாஸ்டர் ஆப் பாரிஸ்’ பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார். இச்சிலை களை வாங்குவோர் வீடுகள், கோவில்கள், திருமண மண்ட பங்களில் வைக்கலாம். ஆனால், நீர் நிலைகளில் கரைக்க அனுமதிக்க முடியாது.
அதேநேரத்தில் `பிளாஸ் டர் ஆப் பாரிஸ்’ சிலைகள் விற் பனையை அதிகாரிகள் தடுக்க முடி யாது. மனுதாரர் சிலைகள் வாங்கு வோரின் விவரங்களை பதிவிட வேண்டும் என உத்தரவிட்டிருந் தார். இந்த உத்தரவை ரத்து செய் யக்கோரி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர், உயர் நீதிமன்றக் கிளை யில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி. பரத சக்கரவர்த்தி அமர்வு விடுமுறை நாளான ஞாயி றன்று அவசர வழக்காக விசா ரித்தது. அப்போது நீதிபதிகள் பிறப் பித்த உத்தரவு: பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படை யில் தான் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதிமுறைகளை வகுத் துள்ளது. அதை ஏன் பின்பற்ற வில்லை. விஷம் என்பதில் ஒரு துளி விஷம், அதிக விஷம் என்பது இல்லை. எல்லாமே விஷம்தான். அமோனியம் மெர்குரி போன்று `பிளாஸ்டர் ஆப் பாரிஸ்’ நச்சுப் பொருள்தான். `பிளாஸ்டர் ஆப் பாரிஸ்’ சிலைகளை விற்க அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்கப்படு கிறது என உத்தரவிட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து பிர காஷ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு அவ சர வழக்காக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதி ஜேபி பார்திவாலா, நீதிபதி மனோஜ் மிஸ்ரா அமர்வில் திங்க ளன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், அனு மதிக்கப்பட்ட அளவில்தான் விநா யகர் சிலைகள் தயாரிப்பில் பிளாஸ் டர் ஆப் பாரிஸ் பயன்படுத்தப்பட் டுள்ளது. இந்நிலையில், இந்த மூலப்பொருட்களால் செய்யப் பட்ட சிலைகளின் விற்பனைக்கும், கரைக்கவும் தடை விதிக்கப் பட்டுள்ளதால், பெரும் பொருளா தார இழப்பைச் சந்திக்க நேரிடும் என்று வாதிடப்பட்டது. அப்போது தமிழக அரசுத் தரப் பில், எந்த வகையிலும் தடை செய் யப்பட்ட பொருட்களைப் பயன் படுத்தி தயாரிக்கப்பட்டிருந்தாலும், அந்த விநாயகர் சிலைகள் அனு மதிக்கப்படாது. இதுதான் விதி முறையாக இருந்து வருகிறது. சிலைகள் செய்வதற்கான உரிய அனுமதியை மனுதாரர் பெற்றி ருக்கவில்லை. மேலும், எந்தப் பொருட்களைக் கொண்டு விநாய கர் சிலைகள் செய்ய வேண்டும் என்பது தொடர்பாக மாசுக் கட் டுப்பாட்டு வாரியம் வழிகாட்டு நெறி முறைகளை வெளியிட்டிருக்கிறது. அதை பின்பற்றி தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்குத்தான் விற்பனை செய்யவும், நீர்நிலை களில் கரைக்கவும் அனுமதி வழங் கப்படுகிறது” என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கில், உயர் நீதிமன்ற மதுரை கிளை இரு நீதிபதிகள் பிறப்பித் துள்ள உத்தரவில் தலையிட முடி யாது. பொது நீர் நிலைகளில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலப் பொருட்களைக் கொண்டு தயா ரிக்கப்பட்ட சிலைகளை கரைக்கக் கூடாது என்பது சரியானதுதான் என்று உத்தரவிட்டனர்.