அரியலூர், மே 1-
அரியலூர் மாவட்டத்தில் ஜெயங் கொண்டம் ஒன்றியம் மீன்சுருட்டி கடை வீதியில் தில்லியில் போராடும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரி வித்து மாதர் சங்கம் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
இதில், சங்கத்தின் ஜெயங்கொண் டம் ஒன்றியச் செயலாளர் எம்.சிவ சங்கரி தலைமை வகித்தார். மாதர் சங்க மாவட்டத் தலைவர் பி.பத்மாவதி, மாவட்டச் செயலாளர் டி.அம்பிகா ஆகி யோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜெயங்கொண்டம் ஒன்றியச் செயலாளர் எம்.வெங்கடா சலம், குண்டவெளி கிளைச் செயலா ளர் சஞ்சை காந்தி, விவசாயத் தொழி லாளர்கள் சங்க மாவட்டப் பொருளா ளர் சுந்தரமூர்த்தி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ரவீந்திரன் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர் மணியம் மாள், ஒன்றியத் தலைவர் மீனாட்சி, ஒன்றியக் குழு உறுப்பினர் ஜெயக் கொடி மற்றும் குண்டவெளி கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.