எழுது பொருட்கள் வழங்கல்
பாபநாசம், ஜூன் 25- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அட்சயம் லயன்ஸ் சங்கம், பாப நாசம் கிரீன் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் இணைந்து பாபநாசம் வங்காரம் பேட்டை அரசு உதவிபெ றும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, எழுது பொருட்கள் வழங் கும் நிகழ்ச்சி நடை பெற்றது.
இதில் 5 ஆம் வகுப்பு மாணவர்கள் 50 பேருக்கு ரூ. 20,000 மதிப்பிலான நோட்டு, சார்ட், எழுது பொருட்கள் வழங்கப்பட் டன. இதில் தலைவர் வக்கீல் சரவணன், செய லர் மணி, பொருளாளர் சந்துரு, நிர்வாக அலுவ லர் பழனியப்பன், முதல் துணைத் தலைவர் சிவக் குமார், தலைமைப் பண்பு ஒருங்கிணைப்பாளர் ராகுல், சேவைத் திட்ட ஒருங்கிணைப்பாளர் பரணிதரன், இயக்குநர் சிவலிங்கம் உட்பட ஆசிரி யர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
அரசியல் பயிற்சி வகுப்பு
தஞ்சாவூர், ஜூன் 25- தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஒன்றியம், செந்தலை வரகூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரசியல் பயிற்சி வகுப்பு நடை பெற்றது.
சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா தலை மையில் நடைபெற்ற அமர்வில், ‘கட்சி திட்டம்’ என்ற தலைப்பில், சிபிஎம் புதுக்கோட்டை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் மணவாளன், ஒன்றியக் குழு உறுப்பி னர் எம்.பழனியய்யா தலைமையில் நடை பெற்ற அமர்வில், ‘கட்சி அமைப்பு விதி’ என்ற தலைப்பில், மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், ஒன்றியக் குழு உறுப்பினர் எம்.ராம் தலைமையில் நடை பெற்ற அமர்வில், ‘கட்சி மீட்டுருவாக்கம்’ என்ற தலைப்பில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.பக்கிரிசாமி ஆகி யோர் பேசினர். இதில் ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்ட னர்.
தெருமுனைக் கூட்டம்
திருச்சிராப்பள்ளி, ஜூன் 25 - நூறுநாள் வேலை உட்பட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில், தளுகை ஊரா ட்சி மன்ற அலுவலகம் முன்பு நடைபெற உள்ள காத்திருப்பு போராட்டம் குறித்து த.மங்கப்பட்டி, த.மங்கப்பட்டி புதூர், த. பாதரப்பேட்டை, த.முருங் கப்பட்டி, எம்ஜிஆர் நகர் ஆகிய ஐந்து மையங் களில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சங்கத் தின் ஒன்றியத் தலைவ ரும், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினருமான முத்துக்குமார் தலைமை வகித்தார். இக்கூட்டத் தில் வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் பாலகுமார், விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் தெய்வநீதி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டியன் ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசி னார். இதில் ஒன்றியச் செயலாளர் கணேசன், பொருளாளர் மங்கள்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ரத்த தானம் அளித்த தன்னார்வலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கல்
அரியலூர், ஜூன் 25 - கடந்தாண்டு ரத்த தானம் அளித்த தன்னார்வலர்கள் 24 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவு பதக்கங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்சியர் ஜா. ஆனிமேரி ஸ்வர்ணா, 2023-2024 ஆண்டுகளில் நடைபெற்ற முகாம்களில், ரத்த தானம் அளித்த தன்னார்வலர்கள் 24 பேருக்கும், உலக குருதி கொடையாளர் தினத்தையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த 6 மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவு கேடயங்களை வழங்கினார்.
பின்னர் ஆட்சியர் தெரிவிக்கையில், “இந்த ஆண்டின் உலக குருதி கொடையாளர் தினத்தின் கருப்பொருளாக “ரத்த நன்கொடையின் 20 ஆம் ஆண்டு கொண்டாட்டம், ரத்த கொடையாளர் அனைவருக்கும் நன்றிகள்” என்ற பொருளை மையமாக கொண்டு நடைபெற்று வருகிறது.
அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யின் ரத்த மையத்தில் கடந்த ஆண்டு 3846 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது. அதனைக் கொண்டு 7000-க்கும் மேற்பட்ட ரத்தம் மற்றும் ரத்த கூறுகள், உள்நோயாளிகளாக சேர்க்கப்பட்ட பல்வேறு நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டு உள்ளன” என்றார்.
இடஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களிடம் பணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள்நடவடிக்கை கோரி மாணவர் சங்கம் மனு
திருச்சிராப்பள்ளி, ஜூன் 25- திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவ லரிடம், இந்திய மாணவர் சங்கம் திருச்சி மாநகர், புறநகர் மாவட்ட குழுக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறி யிருந்ததாவது:
திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் படிக்க கூடிய மாணவர்களிடம் தனியார் பள்ளி முத லாளிகள் பணம் வசூலித்து வருகின்றனர்.
ஏழை மாணவர்களும் தனியார் பள்ளி களில் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத் தில் 2009 ஆம் ஆண்டு 25 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. ஆனால் இன்று தனி யார் பள்ளிகள், “இட ஒதுக்கீட்டில் படிக்கக் கூடிய மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கட்டணத்தை தனியார் பள்ளிகளுக்கு அரசு வழங்கவில்லை” என காரணம் காட்டி பெற் றோர்களை மிரட்டி பணம் வசூலிக்கிறது.
இதனை இந்திய மாணவர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உடனடியாக தனியார் பள்ளி களில் ஆய்வு நடத்தி 25 சதவீத இட ஒதுக் கீட்டில் படிக்கக் கூடிய மாணவர்களிடம் பணம் வசூல் செய்யும், தனியார் பள்ளி களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.
வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகை திருட்டு
அரியலூர், ஜூன் 25- அரியலூர் மாவட்டம், செந்துறையை அடுத்த சிறு கடம்பூர், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தமிழ ரசன் (60). ஓய்வு பெற்ற அரசுப் பேருந்து ஓட்டுநரான இவர், நெஞ்சுவலி காரணமாக தனது வீட்டை பூட்டி வீட்டு, திருச்சியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் ஞாயி றன்று மாலை 5.30 மணிக்கு தமிழரசன் வீட்டுக்குச் சென்ற அவரது சித்தி புவனேஸ்வரி, மின் விளக்கை எறியவிட்டு வீட்டை பூட்டிச் சென்றார். பின்னர் அவர் இரவு 10.45 மணிக்கு விளக்கை அணைக் கச் சென்ற போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 22 பவுன் நகைகள், ரூ.30,000 ரொக் கம் ஆகியவை திருடு போயி ருப்பதை கண்டு அதிர்ச்சிய டைந்தார். இதுகுறித்த புகா ரின் பேரில் செந்துறை காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.