தஞ்சாவூர், ஜூலை 10 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி, நாட்டாணிக் கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இயங்கி வரும், அங்கன்வாடி பள்ளிக்கு மெகா பவுண்டேஷன் சார்பில் கற்றல் உபகரணங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் வழங்கப்பட்டன. மரத்தினால் செய்யப்பட்ட மணிச் சட்டம், தமிழ், ஆங்கில எழுத்துக்கள், வண்ணங்களை அடையாளப் படுத்துதல், உடல் உறுப்புகளை அறிந்து கொள்ளுதல் உள்ளிட்ட ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள விளையாட்டுப் பொருட்களை மெகா பவுண்டேஷன் பொறுப்பாளர் நிமல் ராகவன் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கினார். விளையாட்டுப் பொருட்களைக் காட்சிப்படுத்தியதும் குழந்தைகள் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிகழ்வில், பள்ளித் தலைமை ஆசிரியர் திருஞானம், பள்ளி மேலாண்மை குழு தலைவி பார்கவி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வீராச்சாமி, மெய்ச்சுடர் ஆசிரி யர் நா.வெங்கடேசன், தமிழ் வழிக் கல்வி இயக்க பொறுப்பாளர் த.பழனிவேல், அங்கன்வாடி ஆசிரியை மைமூன் சுலைஹா ஆகியோர் கலந்து கொண்டனர்.