districts

அண்ணா சர்க்கரை ஆலையில் நிர்வாக குளறுபடி: கரும்பு சாகுபடி பரப்பளவு குறைய வாய்ப்பு

தஞ்சாவூர், அக்.2 -  குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை யின் நிர்வாகக் குளறுபடி யால் கரும்பு சாகுபடி பரப்பளவு குறைய வாய்ப்புள் ளதாக விவசாயிகள் தெரி வித்தனர். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் சர்க்கரை ஆலை அதிகாரி கள், கரும்பு விவசாயிகள் அடங்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கரும்பு விவ சாயிகள் பேசுகையில், “தஞ்சாவூர், புதுக்கோட்டை  மாவட்ட விவசாயிகளுக்காக முன்னாள் முதல்வர் மு.கரு ணாநிதியின் பெரும் முயற்சி யால் குருங்குளத்தில் அறிஞர் அண்ணா சர்க்கரை  ஆலை கொண்டு வரப் பட்டது. தொடக்கத்தில் 4.50  லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட்ட நிலையில் தற்போது சுமார் 2 லட்சம் டன் மட்டுமே அரவை செய்யப்படுகிறது. ஆலையில் தொடர்ந்து சிலர் பணியாற்றுவதால் ஊழல் முறைகேடுகள் நடை பெற்று நீதிமன்றம் வரை  வழக்கு உள்ளது. ஆலை யில் நிர்வாக திறமையின்மை யால் கரும்பு சாகுபடியின் பரப்பளவு ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வரு கிறது. அதனை உயர்த்த  நிர்வாகம் எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை. ஒரு சில அதிகாரிகள் விவ சாயிகளோடு நட்புறவாக உள்ள நிலையில், அவர் களை நிர்வாகத்தினர் பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். சர்க்கரை ஆலையில் 2,500 மூட்டை சர்க்கரை இருப்பு வைக்கப்பட்ட நிலை யில், கடந்த சில மாதங்க ளுக்கு முன் பெய்த மழை யில் அவை நனைந்து சேத மாகின. இதுவரை அதற்கான எவ்வித நடவ டிக்கையும் எடுக்கவில்லை. இந்த சர்க்கரை ஆலை நிர்வாகம் என்பது விவசாயி களை முன்நிறுத்தி, பங்கு தாரர்களாக இணைத்து செயல்பட்டு வருகிறது. ஆனால், விவசாயிகள் அதி காரிகளை சென்று சந்திக்கச் சென்றால், அதிகாரிகள் சந்திக்க மறுப்பது ஏன்? நலிவடைந்து வந்த இந்த ஆலையை மீட்பதற் காக, கரும்பு விவசாயிகள் பெரும் சட்டப் போராட் டத்தை நடத்தி மீட்டுள்ளோம்.  ஆனால் அதிகாரிகள் ஆலையை மீண்டும் நலி வுக்கு கொண்டு செல்லும் வகையில் செயல்படுவதை விவசாயிகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே நிர்வாக குளறு படிகளை களைந்து, ஆலை யின் அரவைத் திறனையும், சாகுபடி பரப்பையும் உயர்த்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினர். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவிக்கையில், “ஆலையில் நடைபெறும் நிர்வாக குளறுபடிகள் விரைவில் தீர்க்கப்படும். விவசாயிகள் நிர்வாகத்தில் தலையிட வேண்டாம். அதனை அதிகாரிகள் பார்த்துக் கொள்வார்கள். சாகுபடி பரப்பையும், அர வைத் திறனையும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.