districts

img

கீழ்வேளூர் தொகுதி மக்களின் குறைகளை போக்கக் கோரும் மனுக்கள் ஒப்படைப்பு

நாகப்பட்டினம், ஆக.2 -

       நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்றத்திற்குட்பட்ட மக்களிடம் குறைகள் கேட்டு, பெற்ற மனுவினை, நாகைமாலி எம்எல்ஏ  அரசு அதிகாரிகளிடம் நேரடியாக சென்று ஒப்ப டைத்தார்.

    கீழ்வேளூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட 89 ஊராட்சிப் பகுதிகளில் கடந்த ஜூன் 26 முதல்  30 வரையிலும், வேளாங்கண்ணி மற்றும் கீழ் வேளூர் பேரூராட்சிகளில் இரண்டு நாட்களும் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற் கொண்டார். அப்போது, அனைத்து தரப்பு மக்க ளையும் சந்தித்து, அவர்களின் குறைகள் கேட்டு  மனுவாக பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வு அனைவரின் கவனத்தையும் பெற்றது.

     ஊராட்சிப் பகுதிகளில் 1468 மனுக்களும், பேரூராட்சிப் பகுதிகளில் 127 மனுக்களும் என 1595 மனுக்கள் மக்களின் கோரிக்கையாக வந்த டைந்தன. சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி, அனைத்து மனுக்களையும் முழுமையாக படித்து, மக்கள் என்ன கோரிக்கை வைக்கி றார்கள் என்பதை கண்டறிந்தார். பின்னர் இதை  வகைப்படுத்தி சம்பந்தப்பட்ட துறைக்கு மேல்  ஒப்பமிட்டு, மனுவின் கோரிக்கைகளை அடிக்  கோடிட்டு, பல்வேறு வேலைகளுக்கு மத்தியில்  அவற்றை செய்து முடித்தார். பின்பு எந்தெந்த தாலுகாவிற்கு எந்தெந்த  மனுக்கள் செல்ல வேண்டும் என வகைப்படுத்தி, எல்லா மனுக்களிலும் கையொப்பமிட்டு, மக்கள்  கொடுத்த கோரிக்கைகளை தனித்தனியாக வகைப்படுத்தினார். இம்மனுக்களை கீழ்  வேளூர் வட்டாட்சியர் க.ரமேஷ், திருக்குவளை வட்டாட்சியர் ஜெ.சுதர்சன், நாகப்பட்டினம் வட்டாட்சியர் ரமேஷ்குமார் ஆகியோரை நேரில்  சந்தித்து வழங்கினார்.  

     நாகப்பட்டினம், கீழ்வேளூர், தலைஞாயிறு, கீழையூர் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த வட்  டார வளர்ச்சி அலுவலர்களிடமும் மனுக்கள் ஒப்படைக்கப்பட்டன.  

    முதியோர் உதவித்தொகை பெறுதல், ஊன முற்றோருக்கான மூன்று சக்கர வாகனம், பேருந்து நிழற்குடை, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, கல்விக் கடன் பெறுதல், தாட்கோ கடன் கோருதல், சாலை வசதி, பேருந்து வசதி,  இலவச வீட்டு மனைப் பட்டா, மின் மாற்றி வைக்க  கோருதல், கால்நடை மருத்துவமனை, கால் நடைகளுக்கான கொட்டகை உள்ளிட்ட பல்  வேறு கோரிக்கைகளை மக்கள் முன்வைத் துள்ளனர்.

துயர் துடைக்கும் வாய்ப்பு

     இதுகுறித்து கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பி னர் நாகை மாலி கூறுகையில், நான் மக்களை  தேடி குறைகள் கேட்டு மனுக்கள் வாங்கும் நிகழ்விற்கு சென்றபோது மக்கள் அனைவரும் உற்சாகத்துடன் என்னை வரவேற்றனர். இதில்  பலரும் என்னுடன் பயணித்து, உதவியாக இருந்  ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இயக்கம், மக்களின் துயரங்களை துடைப்  பதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என கருது கிறேன்.

     மக்கள் தங்களுடைய குறைகளை மனு வாக என்னிடம் கொடுத்துள்ளனர். அவற்றை  உரிய முறையில் பரிசீலித்து, அரசு துறை சார்ந்த  அலுவலர்களிடம் ஒப்படைத்துள்ளேன்.  ஒன்றரை மாதத்திற்குள் அம்மனுவிற்கான தீர்வை எட்டிட வேண்டும் என்று அரசு அதிகாரி களிடம் கேட்டுக் கொண்டுள்ளேன். தொடர்ந்து மனு மீதான நடவடிக்கை குறித்தும் கண்கா ணிப்பேன். அம்மனுக்களுக்கு தீர்வு கிடைக்கும்  வரை, என் நடவடிக்கை தொடர்ந்து கொண்டே  இருக்கும்” என்றார்.